பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏ ஆர் ரஹ்மானுக்கு இப்படிப்பட்ட ஆசையா?.. "வெறித்தனத்தை" புட்டு புட்டு வைத்த மனைவி சாயிரா பானு

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் மறுபக்கம் குறித்து அவரது மனைவி சாயிரா பானு விவரித்தார். சாதுவான ரஹ்மான் இப்படிப்பட்டவரா எனும் அளவுக்கு சாயிராவின் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது.

ஏ ஆர் ரஹ்மான் சின்ன சின்ன ஆசை மூலம் அறிமுகமான அவர் இன்று பல மொழிகளில் இசையமைத்து வருகிறார். முகத்தில் சாப்ட் லுக், பேச்சிலும் சாப்ட், கூச்ச சுபாவம் கொண்ட ரஹ்மான் இசையின் மீதும் தொழிலின் மீதும் கொண்ட அளவு கடந்த அன்பால் ஆஸ்கர் விருதை பெறும் அளவுக்கு உயர்ந்தார்.

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் அதிகம் பேசாதவர் ரஹ்மான். அப்படிப்பட்ட அவரது மறுபக்கம் குறித்து மனைவி சாயிரா பானு விவரித்துள்ளார்.

ஐஸ்வர்யாவை நோக்கியிருந்த கேமரா.. டக்குன்னு கட் செஞ்சா.. அபிஷேக் பச்சன் கால்.. உத்துப் பார்த்தா!ஐஸ்வர்யாவை நோக்கியிருந்த கேமரா.. டக்குன்னு கட் செஞ்சா.. அபிஷேக் பச்சன் கால்.. உத்துப் பார்த்தா!

மறுபக்கம்

மறுபக்கம்

நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் ரஹ்மானும் சாயிரா பானுவும் கலந்து கொண்டார்கள். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் இருவரும் பதிலளித்தார்கள். பின்னர் ஏ ஆர் ரஹ்மானின் மறுபக்கம் குறித்து சொல்வதாக சாயிரா பானு கூறினார்.

சுஹாசினி

சுஹாசினி

இதை கேட்டதும் சொல்லுமாறு மிகவும் ஆர்வமாக சுஹாசினி சொன்னார். சாயிரா கூறுகையில் மற்ற கணவன் மனைவி போல் நாங்கள் இருவரும் பைக்கில் ரவுண்ட் செல்வோம். அவருக்கு பைக் ஓட்டுவது என்றால் அத்தனை பிரியம். விதவிதமான பைக்குகளை ஓட்டி பார்க்க ஆசைப்படுவார்.

ஆசை

ஆசை

வீட்டிலிருக்கும் பைக்கை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருவரும் ரவுண்ட் செல்வோம். அதிலும் ரஹ்மான் ஹெல்மெட் கூட அணிய மாட்டார். என்னை அவர் எப்போதும் பைக்கில் அழைத்து செல்வதையே விரும்புகிறேன். அவரும் எனது ஆசையை அவ்வப்போது நிறைவேற்றிவிடுவார் என்றார் சாயிரா.

உண்மைதான்

உண்மைதான்

இதை கேட்டதும் சுஹாசினி ஸ்டன்னாகி போய் நின்றார். பின்னர் ஆசுவாசப்படுத்திக் கொண்ட சுஹாசினி, சாயிரா சொல்வதெல்லாம் உண்மைதானா என ரஹ்மானிடம் கேட்டார். அதற்கு ரஹ்மான் உண்மைதான். நள்ளிரவு நேரங்களில் பைக்கில் எனது மனைவியை அழைத்து கொண்டு செல்வேன்.

குழந்தைகள்

குழந்தைகள்

பொது மக்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவும் டிராபிக்கில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகதான் இரவு நேரங்களை தேர்வு செய்து நாங்கள் பைக்கில் செல்வோம். எனது குழந்தைகளின் தாயாக நான் எனது மனைவியை விரும்புகிறேன். அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என ரஹ்மான் வெட்கத்துடன் தெரிவித்தார். இதனால் சாயிரா பானு மிகவும் பூரித்து போனார்.

English summary
Oscar Awardee A.R.Rahman's wife Saira Banu revealed details about wild side of her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X