20 பெண்கள்.. சீரழித்து கொன்ற சீரியல் கில்லர் "சயனைடு மோகன்".. 3 வழக்குகளில் தூக்கு தண்டனை!
சயனைடு மோகனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது
Recommended Video
பெங்களூரு: மொத்தம் 20 பெண்கள்.. கர்நாடக மாநிலத்தில் 20 பெண்களைக் கொன்ற சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை நடந்த சம்பவம் இது: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவன் மோகன். பெண் பித்தன்.. எந்த பெண்ணை பார்த்தாலும் விடுவது இல்லை.. கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியே நெருங்கி அவர்களை நாசம் செய்துவிடுவான்.
அவர்களுடன் ஜாலியாக இருந்து கடைசியில் கொலையும் செய்துவிடுவான்.. இவன் முழு நேர வேலையும் இதுதான்.. இவன் ஒரு சைக்கோ கில்லர்!

சயனைடு
குறிப்பிட்ட இந்த 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை மட்டும் 20 பெண்களை ஏமாற்றி கொன்றிருக்கிறான். அத்தனை பெண்களுக்கும் சயனைடு தந்துதான் கொலை செய்துள்ளான். அதனால் சயனைடு மோகன் என்றே அழைக்கப்பட்டான்.

ஆசை
ஏற்கனவே 3 கொலை வழக்குகளில் மரண தண்டனை மோகனுக்கு கிடைத்துள்ளது. இப்போது 4வது வழக்கிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு பெங்களூரு கெம்பேகவுடா பகுதியில் ஒரு பெண்ணை சீரழித்து இதே போல கொன்றதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதலில் வேலை வாங்கி தருவதாக பெண்களிடம் பேச்சு கொடுப்பார். வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பெண்கள் இவரிடம் தொடர்பு கொள்வார்கள்.

உல்லாசம்
பிறகு, கழுத்து நிறைய நகை போட்டு வந்தால்தான் வேலை கிடைக்கும் என்பார். பின்னர் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறுவார்.. இதற்கு பிறகு உல்லாசமாக இருப்பார். ஜாலியாக இருந்துவிட்டு காலையில் ஒரு மாத்திரை தருவார். அது என்ன என்று அந்த பெண் கேட்டால் கர்ப்பதடை மாத்திரை என்பார். ஆனால் அதுதான் சயனைடு.. அதை வாங்கி அந்த பெண் சாப்பிட்டதும், அங்கேயே விழுந்து உயிரிழந்துவிடுவார். உடனே நகைகளை அள்ளிக் கொண்டு எஸ்.ஆகிவிடுவார்.

மியூசிக் டீச்சர்
காதலிக்கும் பெண்களிடம், போலியான பெயர்களை சொல்லிதான் ஏமாற்றுவார். அதுவும் அந்த பெண்களின் ஜாதி பெயர்களை தனக்கு சூட்டிக்கொள்வது இவர் ஸ்பெஷலாட்டி.. இந்த மோகன் ஒரு ஸ்கூலில் சயின்ஸ் டீச்சர் என்பது கூடுதல் தகவல். 2007 ஆம் ஆண்டு மியூசிக் டீச்சர் ஒருவரை இதுபோல கொன்ற வழக்கில்தான் மோகனின் விஷயம் வெளியே தெரிய ஆரம்பத்தது. அதற்குபிறகுதான் இவன் ஒரு சைக்கோ கில்லர் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இவன் மேல் உள்ள பெரும்பாலான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு விட்டன.

தூக்கு
கடத்தலுக்கு 10 வருஷம், பலாத்காரத்திற்கு 7 வருஷம், விஷம் கொடுத்து கொன்றதுக்கு 10 வருஷம், கொள்ளைக்கு 5 வருஷம், மோசடிக்கு ஒரு வருஷம், ஆதாரங்களை அழித்ததற்கு 7 வருஷம்.. இப்படி ஏகப்பட்ட தண்டனைகள் மோகனுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த மரண தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்யப்படும் வரை இந்த எல்லா தண்டனைகளும் ஒரே நேரத்தில் மோகன் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications