என்னங்க இது.. நம்ம சுதாகரனா இவர்.. இப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மெலிஞ்சுட்டாரே!
பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த வி.என்.சுதாகரன் அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்துவிட்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கலங்கிய சம்பவம் நடந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஒரு வேளை அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் தீர்ப்பு.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது இவர்கள் எல்லாம் சேர்ந்து சிறைக்கு சென்று நாட்களை கழித்து, சசிகலா பரோலில் வந்த நாட்களை கழித்து கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு விடுதலை என அறிவிக்கப்பட்டது.

அபராதத் தொகை
இதையடுத்து சசிகலா உள்ளிட்டோர் அபராதத் தொகையை செலுத்தினால் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவர் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவும் இளவரசியும் தலா ரூ 10 கோடி அபராதத் தொகையை செலுத்தினர். இதையடுத்து அவர்கள் விடுதலையாகும் நேரத்தில் சசிகலாவுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டது.

அபராதம்
அவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையிலிருந்தபடியே சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் சுதாகரனால் அபராதத் தொகையை செலுத்த முடியவில்லை.

பெங்களூர் குடும்பத்தினர்
இதையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவுபடி மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்தார். ஏற்கெனவே அவர் பெற்ற தண்டனை காலத்தை கணக்கில் கொண்டு ஓராண்டு ஆவதற்கு முன்பே அவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார். இதற்காக பெங்களூரில் அவரது குடும்பத்தினர் முகாமிட்டிருந்தனர்.

சுதாகரனின் வழக்கறிஞர்
சுதாகரனின் வழக்கறிஞர் உள்ளே சென்று சிறை நடைமுறைகளை முடித்துவிட்டு சுதாகரனை வெளியே அழைத்து வந்தார். அப்போது அவர் பார்ப்பதற்கு உடல் மெலிந்து காணப்பட்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் கண் கலங்கினர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் சிறைச் சாலை வாயிலில் நடைபெற்றது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications