தேர்தலில் ஒருமுறை கூட தோற்காத அனந்த்குமார்.. புற்றுநோயிடம் தோற்ற சோகம்.. பாஜகவின் மகுடம் இவர்!
Recommended Video

பெங்களுர்: பாஜக கட்சியின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் அனந்த்குமார் நேற்று நள்ளிரவில் காலமானார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் 1959 ஜூலை 22ல் பிறந்தவர் அனந்தகுமார். மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் பாஜகவில் இணைந்தார். பாஜக கட்சியை சேர்ந்த இவர் முதல்முறை 1996ல் இருந்து பெங்களூர் தெற்கு லோக் சபா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். அவருக்கு மிகவும் ராசியான பெங்களூர் தெற்கு தொகுதியில் இருந்துதான் அதன்பின் வரிசையாக லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார்.
1996ல் இருந்து 2014 வரை 6 முறை அதே தொகுதியில் வெற்றிபெற்றார். ஒருமுறை கூட தேர்தலில் தோல்வி அடையாத இவர் பாஜக தலைவர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சி தலைவர்களுடனும் நல்ல நட்பில் இருந்தவர்.
இவர் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
2003ல் கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். அவர் தலைவராக இருந்த 2004 சமயத்தில்தான் கர்நாடகாவில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாதம் முன் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவில் இயற்கை எய்தினார்.












Click it and Unblock the Notifications