பொன்னியின் செல்வன் 2: டயலாக்கே இல்லாமலும் ரசிகர்களை கவர்ந்த ராஷ்ட்டிரகூட இளவரசி மாதுளி.. யார் அவர்?
பெங்களூர்: பொன்னியின் செல்வன் பாகம் 2 பார்த்துவிட்டீர்களா? அதில் முதலில் ராஷ்டிரகூட இளவரசி என ஒரு பெண்ணை காட்டுவார்களே அவர் யார் தெரியுமா?
சைலன்ட் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதலாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து அதில் கால சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து எடுத்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், ரகுமான், நிழல்கள் ரவி, பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் இரண்டாம் பாகம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும். இந்த பாகத்துடன் பொன்னியின் செல்வன் முற்றுப்பெற்றுவிட்டது. இந்த பாகத்தில் நடித்த ஒவ்வொவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் தெரியும், ஆனால் ஒரு சீனில் வந்த பெண் யாரென தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
அதாவது ராஷ்டிரகூட மன்னனின் மகள் மாதுளி என ஒரு பெண்ணை மதுராந்கனாக நடித்த ரகுமானிடம் காட்டுவார்கள். அந்த பெண்ணை கொண்டு மதுராந்தகனை வளைக்கும் திட்டத்தை ராஷ்டிரகூடர்கள் கையில் எடுத்திருப்பர். அந்த பெண் இரு காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பார். அவருக்கு எந்த வசனங்களும் இருக்காது. ஆனால் அவரது அழகு ரசிகர்களை ஈர்த்துள்ளது.
அதனால் படம் வெளியானது முதல் அந்த பெண் யார் என சமூகவலைதளங்களில் தேடிவருகிறார்கள். அவர் பெயர் ஸ்ரீமா உபாத்யாயா. இவர் பெங்களூரை சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர். 19 ஆண்டுகளாக அவர் நாட்டிய கலைஞராக உள்ளார். தனது 4 வயதில் நடனமாட தொடங்கிய ஸ்ரீமா தனது தாயிடம் பரதம் பயின்றுள்ளார். இதுகுறித்து ஸ்ரீமா கூறுகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். இந்த படம் ஷூட்டிங் நடப்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் எப்படியோ என்னை பற்றி தெரிந்து கொண்டார்கள், என்னை ஆட்டிஷனுக்கு அழைத்திருந்தார்கள், ஆனால் அவர்கள் என்னை ஆட்டிஷனுக்கு அழைத்தது வேறு ஒரு கேரக்டருக்காக! அதன் பிறகு மாதுளி கேரக்டர் எனக்கு செட் ஆகும் என இயக்குநர் குழு முடிவு செய்து அந்த வாய்ப்பை எனக்களித்தார்கள்.
நான் ஒரு நடிகை கிடையாது. இதுதான் எனது முதல் முயற்சி. பெரிய பெரிய நடிகர்களின் பெயர் இருக்கும் பட்டியலில் எனது பெயரும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோரை பார்த்து வளர்ந்தேன். இன்று அவர்கள் பெயர் இடம் பெற்ற அதே பட்டியலில் என் பெயரும் உள்ளது. நான் கன்னடர். ஆயினும் தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்தேன் என கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications