பெங்களூர் ரூமில் தெரிந்த காட்சி.. அசைவற்ற உருவம் அருகில் 17 வயது வர்ஷினி.. நம்ப முடியாத ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள இம்மடிஹள்ளி பகுதியில் மகளைக் கொலை செய்துவிட்டுத் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத முடிவுக்கு மகளின் உடல்நலக் குறைபாடு காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்ப பின்னணி உள்ளதா என்பது குறித்து ஒயிட்பீல்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். எந்தவிதமான தற்கொலை கடிதமும் சிக்காத நிலையில், இந்த இரட்டை மரணங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுவர்ணா (40), தனது மகள் காருண்யாவுடன் (17) பெங்களூருவில் வசித்து வந்தார். சுவர்ணா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். காருண்யா அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று சுவர்ணா வேலைக்குச் செல்லவில்லை. நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஒயிட்பீல்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சுவர்ணா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். அதே அறையில் மகள் காருண்யாவும் படுக்கையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சுவர்ணா தனது மகள் காருண்யாவுக்கு முதலில் தூக்க மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மகள் இறந்ததை உறுதி செய்த பிறகு, சுவர்ணா அதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுவர்ணாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவர் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மகளுக்கு நீண்ட நாட்களாக இருந்த சில உடல்நலக் குறைபாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சுவர்ணா இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடிதம் எதுவும் இல்லாததால், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி இந்த முடிவிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய போலீசார் முயன்று வருகின்றனர்.
காருண்யா யாரையாவது காதலித்தாரா? அதனால் பிரச்சனை ஏற்பட்டதா? அல்லது வேறு பிரச்சனையால் இந்த கொலை, தற்கொலை நடந்ததா? என்று தெரியவில்லை.. 2 சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டடம் செய்ய அனுப்பி வைத்து விசாரணையை துவங்கி உள்ளனர்.. பிளஸ்-2 மாணவி தாயாலேயே கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications