Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூருவில் கட்டி அணைத்து வரவேற்ற டி.கே. சிவக்குமார்..அன்னப்பறவை ஓவியத்தை பரிசளித்த மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுள்ளனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மேடையில் கட்டி அணைத்து வரவேற்றார் டி.கே. சிவக்குமார். விருந்தினராக சென்றிருந்தாலும் பதவியேற்றவர்களுக்கு அன்னப்பறவை ஓவியத்தை பரிசளித்து பாராட்டினார்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையா பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றுக்கொண்டார். இவர்களுடன் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டர்கள் அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

TN CM MK Stalin gifted Siddaramaiah and DK Shivakumar in Bengaluru

பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பல மாநில தலைவர்கள் பெங்களூரு சென்றிருந்தனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மேடையேறிய போது அங்கிருந்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கட்டியணைத்து வரவேற்றார். பதவியேற்றுக்கொண்ட பிறகு முதல்வர், துணை முதல்வர் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு சிறப்பான பரிசளித்தார். பொன்னாடை போர்த்திய கையோடு அன்னப்பறவை ஓவியத்தை பரிசளித்தார்.

அன்னப்பறவை பற்றி தமிழக இலக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. அன்னப்பறவை நீரில் வாழ்ந்தாலும் அதன் இறகில் ஒருதுளி நீர் கூட ஒட்டாது. பாலும் நீரும் கலந்திருந்தாலும், அன்னம் தனியாகப் பாலினை பிரித்து அருந்தும். நீரின் அழுக்குகளில் வாழ்ந்தாலும், தான் உண்பவற்றை, அருந்துபவற்றை சுத்தமாக்கி உண்ணும் பண்புடையது என அன்னப்பறவை பற்றி பல சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

அன்னப்பட்சி என்பது உண்மையில் உள்ளதா அல்லது கற்பனைத் தோற்றமா என்று கூற சிலரும் கேட்கலாம். நளன் தமயந்தி கதையில் இருவரின் காதலுக்கு அன்னப்பறவைதான் தூது போனதாக எழுதப்பட்டுள்ளது.

இராமாயணம், மகாபாரதம், இதிகாச காவியங்களில் அன்னப்பறவை பற்றி கூறப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் இதை ஹம்சம் அல்லது ஹம்சபட்சி என்று அழைக்கின்றனர். கோவில்களில் இறைவனும் இறைவியும் ஹம்ச வாகனத்தில் ஊர்வலம் வருவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பறவையின் ஓவியத்தை இன்றைய தினம் கர்நாடகாவில் முதல்வர், துணைமுதல்வருக்கு பரிசாக கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+