கர்நாடகாவில் 3வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்.. தினமும் 4 ஆயிரம் கோடி இழப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும், அத்திப்பள்ளியில் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடி, மாநில சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்று அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இன்று 3 வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று முன் தினம் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் ஓடவில்லை. டீசல் விலை உயர்வு, அத்திப்பள்ளியில் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடி, மாநில சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இது தொடர்பாக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி உள்ளிட்டோர் இது தொடர்பாக லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது டீசல் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், அத்திப்பள்ளியில் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடி, மாநில சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் நேற்றும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 6 லட்சம் லாரிகள் ஓடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications