சிறையில் சசிகலாவுக்கு தனி சமையல்.. விசாரணை குழுவிடம் காட்டி கொடுத்தது இந்த மசாலாதான்!
பெங்களூர்: சிறையில் சசிகலாவுக்கு தனி சமையல் என்பதை விசாரணை குழுவிடம் காட்டி கொடுத்தது மஞ்சள் தூளாம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். இந்த சிறையை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறைத் துறை டிஐஜி ரூபா ஆய்வு செய்தார். அப்போது சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதை அவர் அறிந்தார்.
இதையடுத்து உடனடியாக டிஜிபிக்கு புகார் கொடுத்தார். இந்த விவகாரம் பெரிய விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மாநில அரசு இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது.

விசாரணை குழு
இதனிடையே சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ரூபா கேள்வி எழுப்பியிருந்தார். அதில் அவருக்கு கிடைத்த பதிலை விசாரணை குழுவிடம் சமர்ப்பித்தார். அதில் சசிகலாவுக்கு ஒரு அறைக்கு பதிலாக கூடுதலாக 4 அறைகள் வழங்கப்பட்டன.

வேறு அறைகளுக்கு
சசிகலாவுக்கும் இளவரசிக்கும் முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களை கூறி அந்த அறைக்கு பக்கத்தில் இருந்த அறைகளில் யாரையும் அனுமதிப்பதில்லை. சசிகலா சிறைக்கு வந்தவுடன் பக்கத்து அறையில் இருந்த சிறை கைதிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

23 பார்வையாளர்களுக்கு பதில் 48
சிறையில் தனியாக சமைத்து உண்ண கைதிகளுக்கு அனுமதி இல்லை என்கிற நிலையில் சசிகலாவுக்கு அஜந்தா என்ற பெண் கைதியை சமையல் செய்ய சிறை அதிகாரிகள் நியமித்தனர். சசிகலா 23 பார்வையாளர்களை மட்டுமே பார்க்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

சாதாரண உடைகள்
ஆனால் அவரோ 48 பேரை சந்தித்துள்ளார். இது அப்பட்டமான விதிமீறல். சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது சசியும் இளவரசியும் கைதிக்கான சீருடைகளை அணிந்து கொள்ளாமல் வேறு ஆடைகளை அணிந்திருந்ததும் தெரியவந்துள்ளது.

அடையாளம்
எனவே ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், விசாரணை குழு சசிகலா அறையில் ஆய்வு நடத்த சென்றது. அப்போது அங்கு அவர் தனியாக சமையல் செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது.

சசிகலாவுக்கு தனி சமையல்
இதையடுத்து அறையில் பல்வேறு இடங்களில் தேடிய போது மஞ்சள் பொடி பாக்கெட் இருந்ததை விசாரணை குழு கண்டறிந்தது. இதை வைத்து சசிகலா சிறையில் சமையல் செய்தார் என்பது தெரியவந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications