டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் குழும தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன் கொரோனாவால் காலமானார்
பெங்களூரு: டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன் கொரோனாவால் காலமானார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் மிக அதிகமாகி வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனாலும் கொரோனா பாதிப்புகள் தொடர்கின்றன. டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் குழுமத்தின் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன் கொரோனாவால் காலமானார். அவரது கார் ஓட்டுநருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நாராயணசாமி பாலகிருஷ்ணனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாராயணசாமி பாலகிருஷ்ணன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாராயணசாமி பாலகிருஷ்ணன் காலமானார்.
இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. தொடர்ந்து 3ஆவது நாளாக ஏறுமுகத்தில் கேஸ்கள்
நாராயணசாமி பாலகிருஷ்ணனின் மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.