அவ்ளோதான் அரசியல் சட்டம்! சனாதன தர்மம்தான் இனி 'இந்திய சாசனம்'.. 'அலாரம்' அடிக்கும் சித்தராமையா!
பெங்களூர்: இந்தியாவின் அரசியல் சட்டத்தை அழித்துவிட்டு சனாதன தர்மத்தையே இனி இந்திய அரசியல் சாசனமாக பாஜக நடைமுறைப்படுத்தும்; அப்படி நடைமுறைப்படுத்தினால் 90% இந்தியர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிற அபாயம் உருவாகும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.
கர்நாடகாவில் நேற்று அரசியல் சாசன முகப்பு வாசிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பெங்களூர் விதான சவுதாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பெருமளவு பங்கேற்றனர். விதான் சவுதா முன்பாக அனைவரும் அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை வாசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதாவது: போபாலில் பேசிய பிரதமர் மோடி, சனாதன தர்மத்தை ஆதரித்து பேசுகிறார். சனாதன தர்மம்தான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் என்கிறார்.
இந்தியாவின் அரசியல் சட்டம் ஒழிக்கப்பட்டு இவர்கள் பேசுகிற சனாதன தர்மம்- மனு தர்மம் அமலுக்கு வந்தால் தேசத்தின் 90% மக்கள் அடிமைகளாக்கப்படுவர். இதற்கான சதிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். சமத்துவ சமுதாயம், மதச்சார்பற்ற நிலைப்பாடு அடிப்படையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது.
ஜனநாயக கோட்பாடுகள் புத்தர், பசவண்ணர் காலத்தில் இருந்து இந்திய மண்ணில் நிலை பெற்ற ஒன்று. அரசியல் சாசனத்துக்கு எதிரான சக்திகளின் சதிகளை இணைந்து முறியடிப்போம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.












Click it and Unblock the Notifications