கொரோனா தடுப்பில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர், போலீஸ் மீது மக்கள் தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் பாதராயனபுரா பகுதியில், போலீஸ் செக் போஸ்ட்டுகள் மீது ஏரியா மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்கள் பகுதி கொரோனா பாதிப்பு காரணமாக சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
பெங்களூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பாதராயணபுரா. இது கொரோனா ஹாட்ஸ்பாட் ஏரியாக்களில் ஒன்று. மேலும், சீல் வைக்கப்பட்ட பகுதியாகும். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்த 58 இரண்டாவது வகை தொடர்புடையவர்களை மருத்துவமனை அழைத்துச் செல்ல நேற்று இரவு, சுகாதார பணியாளர்கள் சென்றனர். அவர்களை, அங்கேயுள்ள மக்கள் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. போலீஸ் தடுப்பு செக் போஸ்டுகளையும் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து கூடுதல் காவல்துறை குவிக்கப்பட்டனர். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பகுதியில், 10த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். ஒரே கட்டிடத்தில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்திர முகர்ஜி கூறுகையில், சம்பவம் பற்றி முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளேன். தக்க நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கும். இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது, இவ்வாறு கூறியுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications