தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் இல்லை.. உச்சநீதிமன்றத்தில் நாளை சொல்வோம்: சித்தராமையா ’சேட்டை’
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க இயலாத சூழ்நிலையை உச்சநீதிமன்றத்தில் நாளை கர்நாடகா அரசு தெரிவிக்கும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு வெறும் 5,000 கன அடி நீரை மட்டும் திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. காவிரியில் 6,400 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும்; இருந்த போது 5,000 கன அடி நீரை மட்டும் கர்நாடகா திறக்க வேண்டும் என அந்த ஆணையம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.

ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீர்கூட திறக்கவே கூடாது என கன்னட அமைப்புகள், பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. ஏற்கனவே மண்டியாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் செப்டம்பர் 29-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் போராட்டங்களுக்கு பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை முழுமையாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் கர்நாடகா மாநில அரசோ, போராட்டங்களை அமைதி வழியில் நடத்துங்கள்; உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாது என சொல்ல முடியாது என்கிறது. அத்துடன் கடந்த காலங்களில் பங்காரப்பா ஆட்சியில் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டதையும் கர்நாடகா அரசு சுட்டிக்காட்டி வருகிறது.
இந்நிலையில் முழு அடைப்பு போராட்டங்கள் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியதாவது: ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராடுவதற்கு உரிமை உண்டு. எந்த ஒரு ஜனநாயக வழியிலான போராட்டத்தையும் மாநில அரசு தொந்தரவு செய்யாது. ஆனால் பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் காவிரி பிரச்சனையில் பக்கா அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. அப்போது, கர்நாடகா அரசு தரப்பில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர இயலாத சூழ்நிலையை விளக்கி அறிக்கை தாக்கல் செய்வோம். தற்போது உள்ள நிலைமையை விவரிப்போம் என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications