சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
பெங்களூரு: கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் பிறப்பித்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக ஜேடிஎஸ் கட்சியின் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
ஒரு சுயேட்சை உட்பட 17 அதிருப்தி எம்.எல்.ஏக்களை சபாநாயகர் ரமேஷ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் 3 எம்.எல்.ஏக்களும் இன்று 14 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஜேடிஎஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. விஸ்வநாத் கூறியதாவது:
நாங்கள் கொடுத்த ராஜினாமா கடிதங்களை பரிசீலிக்காமல் தகுதி நீக்க உத்தரவை சபாநாயகர் பிறப்பித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி கொடுத்த புகார்களின் அடிப்படையில் மட்டுமே சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
எங்களுக்கும் கூட சட்டம் தெரியும். கூட்டணி அரசு மீதான அதிருப்தியில்தான் நான் பதவியை ராஜினாமா செய்தேன்.

என் ராஜினாமா கடிதத்தை ஏன் பரிசீலனை செய்யவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளோம்.
இவ்வாறு விஸ்வநாத் கூறினார்.
இதனிடையே பாஜகவின் கோவிந்த் காரஜோல் கூறுகையில், எம்.எல்.ஏக்கள் தன்னிச்சையாக ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் பரிசீலிக்கவில்லை.
அரசியல் அழுத்தங்களுக்காக தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் சபாநாயகர். இதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம் என்றார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications