கர்நாடகா எங்க இருக்கு? எகத்தாளமாக கேட்ட ராஷ்மிகா மந்தனா! கடும் வெறியில் கன்னட சினிமா
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெறும் 16-வது சர்வதேச திரைப்பட விழாவை முன்வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன. இதில், பெங்களூர் திரைப்பட விழாவுக்கு கடந்த ஆண்டு வராத நடிகை ராஷ்மிகா மந்தனா, கர்நாடகா எங்கே இருக்கிறது என கேள்வி கேட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
பெங்களூரில் நடைபெறும் 16-வது சர்வதேச திரைபப்ட விழாவில் பங்கேற்று பேசிய கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், கன்னட திரை உலக நட்சத்திரங்களை சரமாரியாக தாக்கி பேசினார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக நடத்தப்பட்ட யாத்திரையில் பங்கேற்க கன்னட திரை நட்சத்திரங்கள் மறுத்துவிட்டனர்; உங்களது பிரச்சனைக்காக என்னிடம் தானே நீங்கள் வரவேண்டும்.. அப்போது நான் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு பாஜக, ஜேடிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், கர்நாடகாவின் உரிமைக்கான போராட்டத்தில் பங்கேற்கவில்லையே என்கிற வலியில் டிகே சிவகுமார் பேசியது சரியே என காங்கிரஸ் ஆதரிக்கிறது.

இதனைத் தொடர்ந்து புதிய சர்ச்சையாக, புஷ்பா-2 படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா சிக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவுக்கு ராஷ்மிகா மந்தனாவை அழைத்த போது, நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன்.. ஆமா.. கர்நாடகா எங்கே இருக்கிறது? என நக்கலாக கேட்டார் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கனிகா கூறுகையில், 2024-ம் ஆன்டு பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அப்போது ராஷ்மிகா மந்தனா அழைக்கப்பட்டார்; ஆனால் ஹைதராபாத்தில் இருக்கிறேன்.. கர்நாடகா எங்கே இருக்கிறது என கேட்டவர் ராஷ்மிகா. இத்தனைக்கும் கன்னட சினிமாவில்தான் அவர் அறிமுகமானார். இதனால் ராஷ்மிகா மந்தனாவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்; மேலும் கன்னட சினிமாக்களுக்கு மாநில அரசு மானியம் தருவதை நிறுத்தியாக வேண்டும். இது தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு கடிதமும் அனுப்ப போகிறேன். கன்னட சினிமா வர்த்தகசபையின் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications