ரூட் கேனால் சிகிச்சையால் பிரபல நடிகையின் முகம் வீங்கியது ஏன்?.. மருத்துவர் இத்தனை கவனக்குறைவா?
பெங்களூர்: பெங்களூரில் பல் வலிக்கு சிகிச்சை பெற்ற பிரபல நடிகை சுவாதியின் முகம் வீங்கியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
பெங்களூர் ஜே பி நகரில் வசித்து வருபவர் சுவாதி. இவர் கன்னட நடிகை. ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டது.
இதற்காக அவர் ஹெண்ணூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஒரு மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

ரூட் கேனால் சிகிச்சை
அப்போது பல் வலிக்கு ரூட் கேனால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு பல்லில் ரூட் கேனால் சிகிச்சை செய்ய மயக்க ஊசியை போட்டுவிட்டுள்ளார். இதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவுடன் சுவாதியின் முகம் வீங்கியது.

20 நாட்களாகியும் சரியாகவில்லை
ஆனாலும் சரியாகவில்லை. இதனால் சுவாதி கடந்த 20 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். 20 நாட்களாகியும் முகம் சரியாகாததால் அவர் மீண்டும் மருத்துவமனையை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு யாரும் சரியாக பதில் சொல்வது இல்லை என்றும் சுவாதி குற்றம்சாட்டை முன் வைத்துள்ளார்.

சாலிசிலிக் ஆசிட்
இதையடுத்து பொருத்தது போதும் என நினைத்த சுவாதி வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது சுவாதிக்கு மயக்க ஊசிக்கு பதிலாக சாலிசிலிக் ஆசிட்டை (Salicylic Acid) அந்த மருத்துவர் செலுத்தியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து புதிய மருத்துவமனையில் அந்த மருத்துவர் சிகிச்சை அளித்து தற்போது மெதுவாக நலமடைந்து வருகிறார் சுவாதி.

சாலிசிலிக் ஆசிட்டின் நன்மைகள் என்ன
சாலிசிலிக் ஆசிட் என்பது முகத்தில் உள்ள முகப் பருவை குணப்படுத்த பயன்படுத்தக் கூடியது. தோலில் ஊடுருவி சென்று முகப் பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும். அது போல் தோலில் அதிக எண்ணெய் உற்பத்தியை குறைக்கும். தோலில் உள்ள துளைகள் எப்போதும் திறந்திருக்க உதவும்.












Click it and Unblock the Notifications