Gowri serial: "கௌரி" சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்தது ஏன்? கடிதம் சிக்கியது!
பெங்களூர்: கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "கௌரி" எனும் சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது அறையிலிருந்து தற்கொலை கடிதமும் கைப்பற்றப்பட்டது.
பெங்களூரை சேர்ந்தவர் நந்தினி. இவர் கன்னடம், தமிழ் மொழிகளில் சீரியல்களில் நடித்து வந்தார். கௌரி சீரியலில் நந்தினி, துர்கா எனும் கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாராம்.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் நந்தினி தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. தற்கொலை செய்வதற்கு முன்பு துர்கா ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது: திருமணம் தொடர்பாக என்னை பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். எனக்கு திருமண விஷயத்தில் எனது விருப்பங்களை கேட்கவில்லை. சொந்தமாக முடிவெடுக்கவும் குடும்பத்தினர் தடையாக இருந்தனர் உள்ளிட்ட விஷயங்களை அவர் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நந்தினி தந்தையின் மரணத்திற்கு பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாராம். குடும்பத்தினர் திருமணத்திற்கு வற்புறுத்தியது, குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு, வேலை உள்ளிட்ட காரணங்களால் நந்தினி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
நந்தினியின் தந்தை பள்ளி ஆசிரியராக இருந்தாராம். அவர் பணியில் இருந்த போதே இறந்துவிட்டாராம். தனது நடிப்பு கனவுக்கு உயிர் கொடுத்த தந்தையை இழந்த பிறகு நந்தினி மனதளவில் பாதிக்கப்பட்டாராம்.
கருணை அடிப்படையில் தனது தந்தையின் ஆசிரியர் வேலை, நந்தினிக்கு கிடைத்தது. ஆனால் நடிப்பதில்தான் நந்தினிக்கு ஈடுபாடு இருந்ததாம். இதனால் அந்த வேலையை வேண்டாம் என சொல்லிவிட்டாராம். இதனால் நடிப்பதை விட்டுவிட்டு டீச்சர் வேலைக்கு போ என குடும்பத்தினர் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
நந்தினிதான் அவரது குடும்பத்திற்கு மூத்த மகளாம். அவருக்கு ஒரு தங்கை இருக்கிறாராம். இதனால் நந்தினிக்கு தனது குடும்பத்தின் பாரத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டாராம். இதையும் தனது கடமையாக ஏற்று உழைத்து வந்த நிலையில் நடிப்புக்கு வீட்டில் தடை போட்டது அவரை கவலைக்குள்ளாக்கிவிட்டதாம்.
இந்த விவகாரத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறதாம். நந்தினி கடைசியாக எங்கு சென்றுவிட்டு வந்தார்? யாருடன் போனில் பேசினார் உள்ளிட்ட தகவல்களை எல்லாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications