டன் டனாக கொட்டி கிடக்கும் தங்க புதையல்.. ஆனாலும் KGF மூடப்பட்டது ஏன் தெரியுமா!
பெங்களூர்: கர்நாடகாவில் அமைந்துள்ள கேஜிஎஃப் இப்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதை மீண்டும் திறக்க ஆய்வுகள் நடந்து வருகிறது. இது ஒரு முக்கிய கேள்வியையும் எழுப்புகிறது.. கோலார் தங்க வயலில் இன்னும் தங்கம் இருக்கும்போது, சுரங்கங்கள் ஏன் மூடப்பட்டன? இந்த கேள்விக்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் தங்க இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது நாட்டிற்கான தங்கத்தை பெரும்பாலும் இறக்குமதி செய்வதால் அந்நிய செலாவணி அழுத்தத்தில் உள்ளாகிறது. இதற்கிடையே இந்தியா தனது மிகப் பழமையான தங்கச் சுரங்கப் பகுதிகளில் ஒன்றான கோலார் தங்க வயலை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

தங்கச் சுரங்கம்
ஆனால், இந்த முறை புதிய சுரங்கங்கள் தோண்டுவதற்காக அல்ல, மாறாக அங்கிருக்கும் தங்கக் கழிவுகளிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பதே இதன் நோக்கமாகும். கர்நாடகாவின் கோலார் தங்க வயலில் உள்ள பாரத் தங்கச் சுரங்க நிறுவனம் வசம் சுமார் 33 மில்லியன் டன் தங்க வளம் மிகுந்த தாதுக் கழிவுகள் குவிந்துள்ளன. பல ஆண்டுகளாக இவை அப்படியே இருக்கிறது. இதை விரைந்து பிராசஸ் செய்து பணமாக்க வேண்டுமெனச் சுரங்க அமைச்சகத்திற்கு நாடாளுமன்றக் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
இவை தாது கழிவுகள் தான் என்றாலும் இதில் இன்றுமே கணிசமான அளவில் தங்கம் உட்பட பிற உலோகங்கள் மிக்ஸ் ஆகியிருக்கலாம் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.. அதேநேரம் இதைப் பிரித்து எடுப்பது ஈஸியானது இல்லை. இதில் இருக்கும் கெமிக்கல்கள் மற்றும் கன உலோகங்களால் சுற்றுச்சூழலுக்கும் கூட ஆபத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கோலார் தங்கச் சுரங்கம்
கோலார் தங்கச் சுரங்கம் 2001ல் மூடப்பட்டது. சுரங்க செயல்பாடுகள் பொருளாதார ரீதியாக லாபமற்றதாக மாறியதே இதற்கு முக்கிய காரணம். ஆனாலும், இந்த இடத்தை அரசு தொடர்ந்து பராமரித்து வருகிறது. உதாரணமாக, 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் இதன் பராமரிப்புக்காக ₹8.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள சொத்துகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் பல்வேறு வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் தங்கக் கழிவுகளில் இருந்து தங்கத்தைப் பிரித்து எடுக்க மீண்டும் திட்டம் போட்டுள்ளனர்
இது ஒரு முக்கிய கேள்வியையும் எழுப்புகிறது.. கோலார் தங்க வயலில் இன்னும் தங்கம் இருக்கும்போது, சுரங்கங்கள் ஏன் மூடப்பட்டன? இந்த கேள்விக்கான பதிலை நாம் பார்க்கலாம். கேஜிஎஃப் ஒரு காலத்தில் இந்தியாவின் மிக உற்பத்தித்திறன் மிக்க தங்கச் சுரங்க மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. அதன் செயல்பாடுகள் அனைத்தும் பிஜிஎம்எல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டன.
கேஜிஎஃப்
ஆனால் 1990களின் பிற்பகுதியில் நிலைமை மாறியது. கேஜிஎஃப்- இல் இருந்து தங்கத்தை வெட்டியெடுப்பதற்கான செலவு என்பது விற்கப்படும் தங்கத்தின் மதிப்பை விட அதிகமாக இருந்தது. எளிதில் அணுகக்கூடிய, உயர்ந்த ரகத் தங்கம் முழுவதும் ஏற்கெனவே வெட்டியெடுக்கப்பட்டுவிட்டது. தங்க தாதுகள் மட்டுமே எஞ்சியிருந்தன. மேலும், உலகில் உள்ள மிக ஆழமான சுரங்களில் ஒன்றாகவும் கேஜிஎஃப் உள்ளது. இது செயல்பாடுகளை மேலும் சிக்கலானதாகவும், அபாயகரமானதாகவும், மிகவும் செலவு மிகுந்ததாகவும் மாற்றியது.
தொழிலாளர், எரிசக்தி மற்றும் பராமரிப்புச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சுரங்கங்களில் தங்கம் இருந்தன.. ஆனால் அதைப் பிரித்தெடுப்பதற்கான செலவுகள் அதிகமாகிவிட்டது. அவ்வளவு செலவு செய்து தங்கத்தை எடுப்பதில் லாபம் இல்லை என்பது தெளிவானது. இதனால் தான் தங்கம் இருந்த போதிலும் இந்த 'தாதுக் கழிவுகள்' அப்படியே விடப்பட்டது.
தொழில்நுட்பம்
அந்த காலத்தில் தொழில்நுட்பம் இந்தளவுக்கு மேம்பட்டதாக இல்லை. அப்போது இருந்த முறைகளைக் கொண்டு மிக நுண்ணிய தங்கத் துகள்களை மீட்க முடியவில்லை. பொருளாதார ரீதியாகவும் இப்படிச் செய்வது லாபகரமாக இருக்கவில்லை. இதனால் தங்கக் கழிவுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. இந்த தாதுக் கழிவுகள் வெறுமனே எஞ்சியிருக்கும் பாறைகள் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவையாகவும் இருக்கலாம். தங்கச் சுரங்கக் கழிவுகளில் பெரும்பாலும் கெமிக்கல் அதிகமாக இருக்கும். காலப்போக்கில், இவை நிலத்தடி நீரில் கலந்து, மண்ணை மாசுபடுத்தும்.
இப்போது தங்கம் விலை உயர்ந்துவிட்டது. அதேபோல தங்கத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பமும் மேம்பட்டுவிட்டது. இதனால் இந்த கழிவுகளில் இருந்து தங்கத்தைப் பிரித்து எடுப்பது லாபகரமாகவே இருக்கும். ஆனால் கவனமாகக் கையாளப்படாவிட்டால் இது மிகப் பெரிய சுற்றுச்சூழல் ஆபத்தையும் கூட ஏற்படுத்தலாம். எனவே இது எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும்!
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications