மேகதாது அணை திட்டத்தை கைவிடுவதா?.. அந்த பேச்சுக்கே இடமில்லை.. ஸ்டாலினுக்கு எடியூரப்பா பதில் கடிதம்
பெங்களூர்: மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் "மேகதாது அணையை கட்டி முடிக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், மேகதாது அணையை கட்டினால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மேகதாது அணை திட்டத்தை கைவிடுங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

தண்ணீர்
இதற்கு பதிலளித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில், பெங்களூர் நகருக்கு ஆண்டுக்கு 23.5 டிஎம்சி தண்ணீரை சேமித்து வழங்க வேண்டிய சூழல் உள்ளது.

கடிதம்
இத்தகைய சூழல் குறித்து தமிழக அரசுக்கு விரிவாக கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புி தெரிவித்து வருகிறது. அணைகட்டும் பணிகள் விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் முறையான அனுமதியுடன் தொடங்கப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா
தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தண்ணீர்
பெங்களூர் நகரின் தண்ணீர் தேவைக்காகவே இந்த அணையை கட்ட தீவிரம் காட்டுவதாக எடியூரப்பா கூறுகிறார். இதற்கு ஸ்டாலினோ, பெங்களூர் நகருக்கு தேவையான நீராதாரங்களை கர்நாடகா அரசு எப்போதோ பெற்றுவிட்டது என பதிலளிக்கிறார்.












Click it and Unblock the Notifications