கர்நாடகாவிலும் கால் பதிக்கும் நிவர்.. 115 மி.மீ வரை மழை கொட்டப்போகுது! பெங்களூருக்கு 'மஞ்சள் அலர்ட்'
பெங்களூர்: நிவர் புயல் காரணமாக, பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடகா பகுதிகளில் இன்றும் நாளையும் கன மழை பெய்யக் கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் புதன்கிழமையான இன்று நள்ளிரவு அல்லது வியாழக்கிழமை அதிகாலை, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலின் காரணமாக, நேற்று முதலே, சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பொதுவாக இந்த பகுதிகளில் மழை பெய்யும் போது அதன் தாக்கம் பெங்களூர், கோலார் உள்ளிட்ட தெற்கு கர்நாடகா பகுதிகளிலும் எதிரொலிக்கும். அங்கு மழை பெய்யும். ஆனால், இன்றுவரை தெற்கு கர்நாடகா பகுதிகளில் மழை இல்லை, ஆனால் கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தெற்கு கர்நாடகா மாவட்டங்களான, பெங்களூர், கோலார், சிக்கபள்ளாப்பூர், மண்டியா, ராம்நகர் மற்றும் சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த காற்றும் பெங்களூர் நகரில் வீசக்கூடும். மேலும் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பெங்களூர் வாசிகளும் இரண்டு நாட்கள் வீடுகளுக்குள் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications