கை நிறைய சம்பளம்.. அப்பார்ட்மென்ட் வீடு! ஆனால் ஐடி ஊழியர் நிகழ்த்திய கொடூரம்.. 13 பெண்கள் பாதிப்பு
தில் பிரசாத் கை நிறைய சம்பாதித்தாலும் அவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இவரது கல்லூரி நாட்களிலிருந்தே இந்த பிரச்னை நீண்டு வந்திருக்கும் என்று நினைக்கிறோம் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெங்களூரு: சமூக வலைத்தளங்களில் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி ஐ.டி துறை வேலை வாங்கி தருவதாக கூறி 13 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் கோரமங்லாவில் வசித்து வருபவர் ஐ.டி ஊழியர் தில் பிரசாத். இவருக்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலமாகும். இந்நிலையில் இவரை கடந்த மூன்றாம் தேதி கர்நாடக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கைது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, "கடந்த 29ம் தேதி எங்களுக்கு ஒரு புகார் கிடைத்தது. ஐ.டி துறையில் தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்தான் இந்த புகாரை எங்களுக்கு கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட எங்களுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதாவது எங்களிடம் புகார் அளித்த இளம்பெண் வேலை தேடி இவரிடம் வந்ததாகவும், ஆனால் தில் பிரசாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக பிரசாத்தின் வீட்டிற்கு சென்றிருந்தோம். பிரசாத் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியிருந்தார்.

ஐடி வேலை
இவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஆந்திராவில் இருக்கின்றனர். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்த பொருட்களை சோதனை செய்தோம். அப்போது பிரசாத் எதிர்பாராத விதமாக உள்ளே நுழைந்தார். எங்களை பார்த்து அதிர்ச்சியில் அவர் பதற்றமடைந்தார். நாங்கள் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்த போது வர மறுப்பு தெரிவித்துவிட்டார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையெனில் கைது செய்ய நேரிடலாம் என்று எச்சரித்ததையடுத்து காவல் நிலையத்திற்கு வந்தார். விசாரணையில் தான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்று மறுத்தார். எங்களிடம் புகார் இருக்கிறது என்றும் புகாரின் அடிப்படையிலேயே விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறினோம். அப்போது கூட அவர் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.

செல்போன் லேப்டாப்
இதனையடுத்து அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை நாங்கள் பறிமுதல் செய்து சொதனை செய்து பார்த்தோம். அதில்தான் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவருடைய செல்போனிலும், லேப்டாப்பிலும் சுமார் 5 போலி இன்ஸ்டாகிரம் கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கேட்டதற்கு பிரசாத் எந்த விளக்கமும் கூறவில்லை. இதனையடுத்து மேலும் சோதனை செய்து பார்த்ததில் லேப்டாப்பில் ஆபாச படங்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு பெண்களோடு இவர் உடலுறவு கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு பதில் ஏதும் கூறவில்லை.

மேனேஜர்
இந்த விவகாரம் குறித்து முறையாக பதிலளிக்கவில்லையெனில் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறினோம். அப்போதுதான் இந்த விவகாரம் குறித்து ஒப்புக்கொண்டார். அதாவது இவர் மோனிகா, மேனேஜர் என்று 5 இன்ஸ்டாகிராம் ஐடியை உருவாக்கியுள்ளார். இந்த ஐடி வைத்து வேலை தேடும் பெண்களிடம் ஐ.டி துறையில் வேலை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனை நம்பிய பெண்கள் இவரிடம் பேசியுள்ளனர். அதாவது மோனிகா எனும் போலி அக்கவுன்டில் சேட் செய்து பேசியுள்ளனர். இதனையடுத்து மோனிகா எனும் ஃபேக் அக்கவுண்ட் மூலம் தன்னுடைய செல்போன் எண்ணை அவர் பெண்களிடம் பகிர்ந்திருக்கிறார்.

பலாத்காரம்
இந்த செல்போன் எண்ணில் தன்னை தொடர்புகொள்ளும் பெண்களிடம் வேலையை தாண்டி சில விஷயங்களை பேசியிருக்கிறார். மட்டுமல்லாது தன்னை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட ஓட்டலுக்கு வர சொல்லியுள்ளார். அப்படி நம்பி வந்த பெண்களை இவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இப்படியாக சுமார் 13 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறார். பல பெண்கள் இது ஒரு ஏமாற்று வேலை என்று தெரிந்துக்கொண்டு விலகியுள்ளனர். ஆனால் ஏற்கெனவே இவர் ஓட்டலில் ரகசிய கேமிரா மூலம் இந்த பலாத்கார சம்பவத்தை படம் பிடித்து வைத்துள்ளார்.

மிரட்டல்
இப்படி எடுக்கப்பட்ட படத்தை வைத்து இந்த 13 பெண்களையும் மீண்டும் மீண்டும் தன்னுடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதில் ஒரு பெண் மட்டும் துணிச்சலாக எங்களிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில்தான் நாங்கள் பிரசாத்தை கைது செய்தோம். பிரச்னைகளிலிருந்து தப்பி ஒரே தீர்வு காவல்துறைதான் என்பதை பெண்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்" என்று பெங்களூரு தென்கிழக்கு டிசிபி சிகே பாபா கூறியுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பொசுக்குன்னு இப்படியொரு முடிவா.. OpenAI வாங்கிய புது நிறுவனம்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ? -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications