ஃபிர் ஏக் பார் மோடி சர்கார்.. அப்படின்னு ஆரம்பிச்சு.. மோடி ஹை தோ மும்கின் ஹை.. அவ்வளவுதாங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக புதிய கோஷத்துடன் களமிறங்கியுள்ளது.

2014 ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின் முடிவில் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தோடு களமிறங்கியது பாஜக. ஆனால் அது இந்திய மக்களிடம் எடுபடவில்லை. மாநிலப் பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் அந்த தேர்தலை சந்தித்தனர். பாஜக தோல்வியை தழுவியது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அப்போது ஆட்சிக்கு வந்தது.

BJP coins new slogan for lok sabha election

கடந்த 2014 ம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்த பாஜக இனி மோடி அரசு என்ற கோஷத்தை முன் வைத்தது. குஜராத்தில் மோடி பல்வேறு சாதனைகளை செய்ததாக ஒரு பிம்பம் கட்டி அமைக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் வாயிலாக இந்த பிரச்சாரம் கடுமையாக முன்னெடுக்கப் பட்டது. இனி மோடி அரசு என்ற கோஷம் புகாத இடமே இல்லை என்ற அளவுக்கு அனைத்து இடங்களிலும் ஒரு முழக்கமாக முன் வைக்கப் பட்டது. பாஜக நினைத்தது போலவே இந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.

தற்போது மீண்டும் மக்களவை தேர்தல் வரவிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எங்கள் பாதுகாவலர் ஒரு திருடன் என்ற கோஷத்தை முன் வைத்தார். தன்னை ஒரு திருடன் என்று ராகுல்காந்தி கூறியதால் அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரட்டும் என்று எண்ணிய பாஜக இந்த நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாவலர்கள் என்ற பொருள் வரும் வகையில் சவுகிதார் என்ற கோஷத்தை முன் வைத்தனர். பாஜக தலைவர்களும் சமூக வலை தளங்களில் தங்களது பெயர்களின் முன் ஒட்டாக சவுகிதார் என்று பெயர் மாற்றமும் செய்து கொண்டனர். இருந்தாலும் ராகுலின் பாதுகாவலர் ஒரு திருடன் என்ற கோஷத்தின் முன் சவுகிதார் கோஷம் எடுபடவில்லை.

BJP coins new slogan for lok sabha election

இதனால் தேர்தல் தொடங்கிய பிறகு மீண்டும் ஒருமுறை மோடி அரசு என்னும் பொருளில் ஃபிர் ஏக் பார் மோடி சர்கார் என்ற கோஷமும் மோடி இருந்தால் எதுவும் முடியும் மோடி ஹை தோ மும்கின் ஹை என்ற கோஷமும் முன் வைக்கப்பட்டது. இந்த கோஷங்களை மீண்டும் வேண்டுமா மோடி அரசு எனவும் மோடி இருந்தால் எதுவும் முடியாது எனவும் மாற்றிவிட்டனர் நெட்டிசன்கள்.

இப்படி எந்தப் பக்கம் போனாலும் கேட்டை போடுகிறார்களே என்று எண்ணிய பாஜக மனம் தளராத விக்கிரமாதித்தன் போல பணிகள் தடைபடாமல் இருக்க இதே அரசு தொடரட்டும் என்ற பொருளில் காம் ருகே நா தேஷ் ஜுகே நா என்ற கோஷத்தை முன்னெடுக்க உள்ளது. இந்த கோஷமாவது மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+