ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு! கான்வாய் மீது கருப்பு கொடிகள் வீசப்பட்டதா? போலீசார் விளக்கம் -வீடியோ
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் ஆளுநர் தருமையாதீன நிகழ்ச்சிக்கு சொல்லும்போது பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை தூக்கி வீசி எதிர்ப்புகளை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் தமிழ்நாடு போலீசார் இந்த செய்தியை மறுத்துள்ளனர். ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குக் காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மன்னம்பந்தல் வழியாக தருமை ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை புரிந்தார்.

ஆளுனர் ரவி
தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரதம் செல்ல இருந்தது. இதை இன்று ஆளுனர் ரவிதான் ஆதீனத்தில் துவங்கி வைத்தனர். இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்க கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்து போராட்டம் செய்தனர். ஆளுநருக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்த .

போராட்டம்
மன்னம்பந்தல் பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்கள் போராட்டக்காரர்களை தடுப்புகள் கொண்டு தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிராக பதாகைகளை பிடித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆளுனர் ரவி கான்வாய்
ஆளுநர் மன்னம்பந்தல் பகுதியை கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். தொடர்ந்து ஆளுநர் பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எறிந்து பதாதைகளை சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. ஆளுநர் வாகனம் மீது கருப்பு கொடி எதுவும் வீசப்படவில்லை. பின்னர் கடைசியில் வந்த 3 வாகனங்கள் மீது மட்டும் கொடி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

போராட்டம்
பின்னர் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் அப்பகுதியில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆளுநர் கான்வாய் மீது கருப்பு கொடி வீசிய சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ ஆதாரங்கள் வருகிறது.

தமிழ்நாடு போலீசார்
அதே சமயம் தமிழ்நாடு போலீசார் இந்த செய்தியை மறுத்துள்ளனர். அதன்படி ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ஆளுநரின் வாகனம் மீது கற்கள், கொடிகளை வீசியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுக்குள் வைத்து இருந்ததாகவும் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றியதாகவும் கூறியுள்ளது












Click it and Unblock the Notifications