இந்தியாவில் ரூ. 1100 கோடியை கொட்டும் இன்டல்.. 3000 பேருக்கு வேலை.. ! #intel
பெங்களூரு: ஐடி நிறுவனங்களில் ஆள் குறைப்பு தலைவிரித்தாடி வரும் நிலையில் இன்டல் நிறுவனம் பெங்களூரில் ரூ. 1100 கோடி முதலீட்டில் பிரமாண்ட ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை நிறவவுள்ளது. இதன் மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வேலையிழப்பும், ஆள் குறைப்பும்தான் ஐடி ஊழியர்களிடையே தற்போது பரபரப்பான பேச்சாக உள்ளது. இந்த நிலையில் ரூ. 1100 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது இன்டல். பெங்களூரில் இந்த பெரிய முதலீடை அது செய்யவுள்ளது.
பெங்களூரில் அதி நவீன ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை ரூ. 1100 கோடி முதலீட்டில் நிர்மானிக்கப் போவதாக இன்டல் அறிவித்துள்ளது. இதன் மூலம் 3000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

1999க்கு பிறகு
1999ம் ஆண்டு இன்டல் நிறுவனண் இந்தியாவில் ரூ. 28,000 கோடியை முதலீடு செய்து தனது பணிகளைத் தொடங்கியது. அதன் பிறகு தற்போதுதான் மிகப் பெரிய முதலீட்டை அது இந்தியாவில் கொண்டு வருகிறது. மேலும் பெங்களூரில் உள்ள தனது பணிகள் அனைத்தையும் அது ஒரே கட்டமைப்பு அலுவலகத்தின் கீழ் கொண்டு வரவும் உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான்
அமெரிக்காவைச் சேர்ந்த இன்டல் நிறுவனம் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக அளவில் முதலீடு செய்துள்ளது இந்தியாவில்தான். அமெரிக்காவுக்கு அடுத்து இங்கு மட்டும்தான் அதன் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ஜாபூர் ரிங் ரோட்டில்
பெங்களூரு சர்ஜாபூர் ரிங் ரோட்டில் உள்ள இன்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான 44 ஏக்கர் நிலத்தில் புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. 13 மாதங்களில் இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும்.

கர்நாடக அரசின் சாதனை
உண்மையில் கர்நாடக அரசின் சாதனையாகவே இது பார்க்கப்படுகிறது. ஐடி கடும் தடுமாற்றத்தை சந்தித்து வரும் நிலையில் இன்டல் நிறுவனம் தனது புதிய முதலீட்டை கொண்டு வருவதற்கு சாதகமான முறையில் கர்நாடக அரசும் நடந்து கொண்டுள்ளது. இதனால்தான் இன்டல் புதிய முதலீட்டை அறிவித்துள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications