ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
சென்னை: ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கி ஊழியர்கள் தங்களின் ஊதியத்தை 25 சதவீதம் உயர்த்தித் தர வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை.
இதையடுத்து நாடு தழுவிய அளவில் நவம்பர் 12ம் தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

பேச்சுவார்த்தை
இந்தியன் வங்கிகள் சங்கத்திற்கும், வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

ஊதியம்
வங்கி ஊழியர்கள் 25 சதவீத ஊதிய உயர்வை கேட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையின்போது 23 சதவீதம் கேட்டனர். ஆனால் இந்திய வங்கிகள் சங்கம் 11 சதவீத உயர்வு மட்டுமே அளிக்க முடியும் என்று தெரிவித்துவிட்டது.

வேலைநிறுத்தம்
தங்களின் ஊதியத்தை உயர்த்திக் கொடுக்கக் கோரி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிப்பு
பொதுத் துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் செக் கிளியர் செய்வது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும்.

முன்பும் கூட
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பொதுத் துறை வங்கி ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது.

வங்கிகள்
நாட்டில் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அவற்றில் 8 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் கிளைகளின் எண்ணிக்கை 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை
இன்றைய வேலைநிறுத்தத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 350 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் வங்கிகள்
பொதுத் துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வரும் இந்நாளில் தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.












Click it and Unblock the Notifications