ஆப் லோன்களுக்கு மாற்றாக உள்ள சூப்பர் வழிகள்.. கடன் வாங்கியவர்களுக்கு லட்சக்கணக்கில் லாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு பலர் ஆப் லோன்களில் கடன் வாங்கிவிட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஆன்லைன் ஆப் லோன்களை பொறுத்தவரை உடனடித் தேவையைப் பூர்த்தி செய்துவிடும். ஆனால் மிக அதிக வட்டி மற்றும் மறைமுகக் கட்டணங்கள் இருக்கும். இது உங்களை ஒரு தீராத கடன் சுழலில் தள்ளிவிடும். ஆப் லோன்களுக்கு மாற்றாக உள்ள பாதுகாப்பான வழிகள் மற்றும் கடன் வாங்கும் போது நீங்கள் எப்படி லட்சக்கணக்கில் பணத்தை சேமிக்கலாம் என்பது குறித்த விரிவாக பார்க்கலாம்.

நண்பர் ஒருவர் வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், தவணையில் செல்போன் என வாழ்க்கையே நரகம் போல் இருக்கிறார். மாத சம்பளத்தை நம்பி பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு சிபில் நன்றாக இருந்தாலும், அதிகமான கடன் காரணமாக கடன் பிற வங்கிகளில் கிடைக்கவில்லை.. முதல்முறையாக ஆப்லோன்கள் பக்கம் வந்தார். அடுத்த மாதமே பணத்தை மாற்றிவிட வேண்டிய நிலை இருந்த காரணத்தால் வந்தார். அவரை ஆப் லோன் நிறுவனங்கள், தங்க முட்டை போடும் வாத்து என்பதை அறிந்து ஒரே அமுக்காக அமுக்கினார்கள். எந்த கேள்வியும் இல்லை.. சில நிமிடங்களில் அவர் கேட்ட பணம் வந்தது. உடனே சந்தோஷப்பட்ட அவர், அடிக்கடி ஆப்லோன்களில் கடன் வாங்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஆப் லோன்களின் வலையில் சிக்கினார். இறுதியாக அதிகப்படியான கடனை கட்டவும் முடியாமல், வெளியே வரவும் முடியாமல் முழிக்கிறார். இப்படி பலர் இப்போது தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Excellent alternatives to app-based loans Borrowers save lakhs with out instant app loan

ஏனெனில் முதல் காரணமே மோசமான காரணம் ஆகும். ஆப் லோன்களில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 36% ஆக இருக்கும். வெறும் 10 முதல் 12 சதவீதம் வட்டி விகிதம் இருந்தால் தான் கடன் வாங்குபவர்கள் தப்பிக்க முடியும். ஆனால் பலர் ஆப்லோன்களில் வாங்கிவிட்டு வாங்கிய அளவிற்கு பணத்தை வட்டியாக கட்டுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணத்தை ஆப்லோனில் எடுத்த நண்பர், அதற்காக 45 ஆயிரம் வரை வட்டியாக கட்டுகிறார். மாதம் மாதம் பணம் கட்டப்படுவதால், தங்க நகைக்கடனுடன் ஒப்பிட்டால் மிகப்பெரிய அளவில் அவர் வட்டி கட்டுவதாக அர்த்தம். இப்படி பலர் கடன்களை வாங்கிவிடுகிறார்கள்.

இப்படி ஆப் லோன்களில் கடன் வாங்குவதற்கு பதில் உள்ள மாற்றுவழிகளை முதலில் பார்ப்போம். மிகச்சிறந்த மற்றும் விரைவான வழி என்றால், உங்களிம் உள்ள நகையை அடகு வைப்பது தான். வங்கிகளில் நகைக்கடன் வட்டி விகிதம் 8% முதல் 12% வரை மட்டுமே இருக்கும். ஆப் லோன்களுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு என நகை இருந்தால் அடகு வைத்து பணத்தை கட்டுங்கள். ஆப் லோனில் சிக்கியவர்களும் உடனே நகையை வைத்து கட்டி ஆப் லோனை முடியுங்கள். அதே இஎம்ஐ பணத்தை தங்க நகையில் கட்டுங்கள்.. எவ்வளவு வட்டி விகிதம், அசல் மிச்சமாகிறது என்பதை நீங்களே உணருவீர்கள்..

அடுத்ததாக நீங்கள் சம்பளத் தாரராக இருந்தால், உங்கள் பி.எஃப் கணக்கிலிருந்து அவசரத் தேவைக்காக (திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல்) பணம் எடுக்கலாம். இதற்கு வட்டி கிடையாது, இது உங்கள் சொந்தப் பணம் என்பதால் உடனே எடுத்து ஆப்லோனை முடிக்கலாம். ஆப் லோன் எடுக்காமல் தவிர்க்கலாம். இதுவும் பெரிய அளவில் உங்களுக்கு பயன்தரும்.

அடுத்ததாக எல்.ஐ.சி பாலிசி கடன், உங்கள் எல்.ஐ.சி பாலிசி மீது மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். பாலிசி சரண்டர் மதிப்பில் 90% வரை கடன் கிடைத்து வருகிறது. நான்காவதாக வங்கி தனிநபர் கடன். உங்கள் சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால், முன்னணி வங்கிகளில் 10.5% முதல் 15% வட்டியில் கடன் பெறலாம். இது ஆப் லோன்களை விட பல மடங்கு லாபகரமானதாக இருக்கும். நிறைய வங்கிகள் தந்தாலும், அதனை நடைமுறையில் பெற வேண்டும் என்றால், கண்டபடி கடனை வாங்கி குவிக்கக்கூடாது.. உங்களிடம் வங்கியில் வைப்பு நிதி இருந்தால், அதை உடைக்காமலேயே அதன் மீது 1% கூடுதல் வட்டியில் கடன் பெறலாம்.

கடன் வாங்கும் போது , நீங்கள் செலுத்தும் வட்டிப் பணத்தில் பெரும் பகுதியைச் சேமிக்க சிலவழிகள் உள்ளன. உங்கள் சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், வங்கிகளிடம் நீங்கள் வட்டி விகிதத்தைக் குறைக்கும்படி பேரம் பேசி வட்டியை குறைக்கலாம். அதேபோல் பண்டிகை காலங்களில் வங்கிகள் செயலாக்கக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்யும். அந்த நேரத்தில் கடன் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாகும்.

அதேபோல் உங்களிடம் உபரிப் பணம் கிடைக்கும்போது, கடனின் அசலில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துங்கள். இது உங்கள் கடனின் கால அளவையும், நீங்கள் கட்ட வேண்டிய மொத்த வட்டியையும் பெருமளவு குறைத்துவிடும். இது தான் பணத்தை சேமிக்க உங்களிடம் உள்ள மிகச்சிறந்த வழி.
அதேபோல்எப்போதும் 'Reducing Balance' முறையில் வட்டி கணக்கிடும் வங்கிகளைத் தேர்ந்தெடுக்கவு வேண்டும். அதாவத அசல் குறையக் குறைய வட்டியையும் குறைக்கும். 'Flat Rate' முறையை கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். அதேபோல் ஏற்கனவே உள்ள கடனில் கூடுதல் கடன் வாங்குவதை விட, கடனை விரைவாக முடிப்பதே புத்திசாலித்தனம். கூடுதல் கடன் வாங்குவது வட்டிச் சுமையை மீண்டும் அதிகரித்துவிடும்.

என் நண்பர் விழுந்தது ஒரே விஷயத்திற்கு தான்.. ஆப் லோன்கள் 5 நிமிடத்தில் பணம் தந்தார்கள். அந்த 5 நிமிட அவசரம் 5 ஆண்டுகால நிம்மதியை அவருக்கு முற்றிலுமாக கெடுத்துவிட்டது. அதேபோல் அந்த நண்பர் கடன் வாங்கிய போது, 'Processing fee', 'Insurance premium', 'Documentation charges' என நிறைய கழித்துவிட்டார்கள் . எதிர்பார்த்த தொகையும் கிடைக்கவில்லை. என் நண்பர் செய்த இன்னொரு முட்டாள்தனம் என்னெவென்றால்,
ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கியது தான். அது தற்கொலைக்குச் சமம் என்று எச்சரித்தும் கேட்கவில்லை.. இப்போது மீள வழி தெரியாமல் அவதிப்படுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+