ஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன் தாக்கல் 2 நாட்கள் கூடுதல் அவகாசம்
ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் சில தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்தித்து வருவதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கோடைக்கால விற்பனை ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை இரண்டு நாள்கள் நீட்டித்து மே 22ஆம் தேதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் சில தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்தித்து வருவதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில், 'தொழில்நுட்ப சிக்கல்களைச் சீர்செய்வதற்காக, அமைப்பில் அவசரமாகப் பழுதுபார்த்தல் பணி நடந்து வருகிறது.

எனவே, வரி செலுத்துவோரின் விருப்பத்துக்கேற்ப ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை இரண்டு நாள்கள் நீட்டித்து மே 22ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்ததில் இருந்து ஐம்பது சதவிகித்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தாங்களாகவே மாதந்திர கொள்முதல், விற்பனை மற்றும் நிகர வரி ஆகியவற்றை முறையே ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2, மற்றும் ஜிஎஸ்டிஆர் 3பி ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அனேக வர்த்தகர்களும் தொழில் துறையினரும், ஒருவித நிர்பந்தத்தின் காரணமாகவே அவசர கோலத்தில் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-2பி படிவங்களை இணையதளத்தில் தாக்கல் செய்துவருகின்றனர்.
இன்னும் சில வர்த்தகர்களும், வர்த்தகத்துடன் சேவைத் துறைகளையும் மேற்கொள்ளும் சில தொழில்துறையினரும் இன்றுவரையில் ஜூலை முதல் ஜனவரி வரையில் மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களையும் நிகர வரியையும் தாக்கல் செய்யாமலேயே காலாம் கடத்தி வருகின்றனர்.
இதனால், பொருட்களை விற்பனை செய்தவர்கள் உள்ளீட்டு வரியை பயன்படுத்த முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.
நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் 1.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த 1.03 லட்சம் கோடி ரூபாய் என்பது மார்ச் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசுகளின் ஜிஎஸ்டியை மொத்தமாகப் பிரதிபலிக்கிறது. ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி மே மாதத்தில் வசூலிக்கப்படும். மே மாதத்தில் வசூலிக்கப்படும் ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரியின் மதிப்பு ஜூன் 1ஆம் தேதியன்று அறிவிக்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications