இதுதான் ஹெச்டிஎப்சி வங்கியின் அறமா? 45 கோடி மார்க்கெட்டிங் சர்ச்சையின் பின்னணி?
சென்னை: அரசு நிறுவனமான மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (MSRDC) அளித்த பெரும் வைப்புத்தொகைக்காக, ஹெச்டிஎப்சி வங்கி வழக்கமான வட்டியை விட கூடுதலாகச் சுமார் ரூ.45 கோடி வழங்கியதாகத் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தத் தொகையை நேரடியாக "வட்டி" என்று கணக்கில் காட்டாமல், "மார்க்கெட்டிங் செலவு" போல மறைத்துச் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் வங்கியின் உள்நாட்டு ஒழுங்குமுறை, கணக்கு நடைமுறை மற்றும் நிர்வாக நெறிமுறைகள் மீது கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆங்கில வணிக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி, கடந்த 2021-ல் ஹெச்டிஎப்சி வங்கி, எம்எஸ்ஆர்டிசி-யின் பெரும் வைப்புத்தொகையைக் கவர முயன்றது. அப்போது அந்த அரசு நிறுவனத்திற்குப் பிற வாடிக்கையாளர்களை விட அதிக வட்டி தர ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் அந்த கூடுதல் வட்டித் தொகையை "ஸ்பான்சர்ஷிப்" அல்லது "சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு" செலவாகக் காட்டி, வங்கியின் மார்க்கெட்டிங் பிரிவு வழியாக இடைத்தரகர்கள் மூலம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

பணப் பரிமாற்றம் நடந்தது எப்படி?
செய்தியில் வெளியான தகவல்படி, இந்த பணப் பரிவர்த்தனை நேரடியாக வட்டி செலுத்துவது போல அமையவில்லை. வங்கியின் மார்க்கெட்டிங் துறை வழியாக இடைத்தரகர்களுக்குப் பணம் அனுப்பப்பட்டு, அவர்கள் மூலமாகப் பணம் எம்எஸ்ஆர்டிசி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி , டிடிஎஸ் மற்றும் முகமைக் கட்டணங்கள் போன்ற கழிவுகளுக்குப் பிறகு பணம் நகர்த்தப்பட்டதால், வெளிப்புறப் பார்வைக்கு இது ஒரு விளம்பரச் செலவு போலத் தோன்றும் வகையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நடைமுறை, வட்டிச் செலுத்தலை வேறு கணக்கின் கீழ் மறைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. வங்கியின் கணக்குப் புத்தகத்தில் இது "வட்டிச் செலவு" ஆகக் காட்டப்படாமல் "மார்க்கெட்டிங் செலவாக" காட்டப்பட்டுள்ளதால், வங்கியின் நிதி அறிக்கைகளின் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
ஏன் இது பெரிய விவகாரம்?
ஒரு வங்கி வாடிக்கையாளரை ஈர்க்க அதிக வட்டி தருவது இயல்பான வணிக நடைமுறையாக இருக்கலாம். ஆனால், அந்த கூடுதல் வட்டியை வேறு பெயரில் மறைத்து, கணக்குப் புத்தகத்தில் வேறொரு செலவாகக் காட்டுவது வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட இணக்கம் ஆகிய கோணங்களில் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும். இதனால் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகள், உள் தணிக்கை நெறிமுறைகள் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத் தரநிலைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் உயர் நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. வங்கியின் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளுக்கு இந்த விவகாரம் தெரிந்தே, மார்க்கெட்டிங் துறை மூலமாகப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நிர்வாக நெருக்கடியும், தலைவர் ராஜினாமாவும்
இந்த விவகாரம் வெளியில் தெரிவதற்கு முன்பாகவே, ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் அதனு சக்ரவர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். வங்கிக்குள் நடந்த சில நடைமுறைகள் தன் தனிப்பட்ட அறநெறி மதிப்புகளுடன் பொருந்தவில்லை என்று அவர் கூறியதாகத் தெரிகிறது. இதனால், இந்த விஞசம் வெறும் தற்செயலான நடைமுறைத் தவறு அல்ல; வங்கியின் மேல்மட்ட நிர்வாகத்திலேயே நம்பிக்கைக் குறைவு இருந்திருப்பதை உறுதி செய்கிறது.
பங்குச் சந்தையில் சரிவு
இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. வங்கியின் நிர்வாகத் திறன் மற்றும் நம்பகத்தன்மை மீது ஏற்பட்ட சந்தேகத்தால், முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சமும், வங்கியின் நற்பெயருக்குப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
தீவிரமடையும் விசாரணை
மொத்தத்தில், இந்த விவகாரம் "மார்க்கெட்டிங் செலவு" என்ற பெயரில் மறைக்கப்பட்ட கூடுதல் வட்டிப் பரிமாற்றம் என்ற குற்றச்சாட்டைச் சுற்றியே விசாரணையாக உருவெடுத்துள்ளது. அரசு நிறுவனத்தின் பெரும் வைப்புத்தொகையைப் பெறுவதற்காக, ஒரு முன்னணி தனியார் வங்கியின் நிதி வெளிப்பாடும், நிர்வாக அறமும் சறுக்கியுள்ளதா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் தேவைப்படுகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்














Click it and Unblock the Notifications