ரூ.45 கோடியை மறைக்க திட்டமிட்டு ரூ.24,000 கோடியை இழந்த HDFC வங்கி.. பங்குச்சந்தையில் ரத்தக்களறி..!!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி (HDFC Bank), தற்போது ஒரு பெரும் கார்ப்பரேட் நிர்வாகச் சிக்கலில் சிக்கியுள்ளது. மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்திற்கு (MSRDC) வழங்கப்பட்ட ரூ.45 கோடி தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரும், அதனைத் தொடர்ந்து வங்கியின் பங்குகள் சரிவைச் சந்தித்ததும் ஒட்டுமொத்தப் பங்குச் சந்தையையே உலுக்கியுள்ளது.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் வர்த்தகர் (Option Trader) பி.ஆர்.சுந்தர் தனது எக்ஸ் (X) தளத்தில், "45 கோடி ரூபாய் முறைகேடு புகார், 24,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழக்கச் செய்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரச் செலவாக மாற்றப்பட்ட வட்டிப் பணம்
மகாராஷ்டிர அரசு நிறுவனமான MSRDC, ஹெச்டிஎப்சி வங்கியில் டெபாசிட் செய்திருந்த பெரிய அளவிலான தொகைக்கு, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைத் தாண்டி கூடுதல் வட்டி (Differential Interest) வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
வங்கியின் தணிக்கைக் குழு (Audit Committee) நடத்திய உள் நிர்வாக விழிப்புணர்வு விசாரணையில் (Internal Vigilance Investigation), இந்த கூடுதல் வட்டித் தொகையான ரூ.45 கோடியை, நேரடியாக வட்டி கணக்கில் காட்டாமல், வங்கியின் விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் செலவு (Marketing Expenses) போல கணக்குக் காட்டி மறைக்க முயன்றது அம்பலமாகியுள்ளது.
இதற்காக போலியான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் முறையற்ற இன்வாய்ஸ்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவரின் திடீர் ராஜினாமா
இந்த விவகாரம் கடந்த நிதியாண்டுகளில் நடந்துள்ள நிலையில், வங்கியின் விளம்பரத் துறையின் செயல்பாடுகள் "திருப்திகரமாக இல்லை" என உள் தணிக்கையில் மதிப்பிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 12-ம் தேதியன்று வங்கியின் தணிக்கைக் குழு முறையான விழிப்புணர்வு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே, அதாவது மார்ச் 18 அன்று, ஹெச்டிஎப்சி வங்கியின் முன்னாள் தலைவர் அடானு சக்ரவர்த்தி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். வங்கியில் நடைபெறும் சில நடைமுறைகள் தனது தனிப்பட்ட நெறிமுறைகளுக்கு உகந்ததாக இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த ரூ.45 கோடி விவகாரமே அவரது வெளியேற்றத்திற்குக் காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பங்குச் சந்தையில் அதிர்ச்சி
இந்த முறைகேடு தொடர்பான தகவல் கசிந்த உடனே, பங்குச் சந்தையில் ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு விற்கத் தொடங்கினர்.
புதன்கிழமை வர்த்தகத்தில், ஹெச்டிஎப்சி வங்கியின் பங்கு விலை சுமார் 2.45 சதவீதம் வரை சரிந்து, ஒரு பங்கின் விலை ரூ.759.80 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. முதலீட்டாளர்கள் மத்தியில் ஹெச்டிஎப்சி வங்கியின் கார்ப்பரேட் நிர்வாகத் தரம் மற்றும் கணக்கு வழக்குகளின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.24,000 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பு (Market Capitalization) இழப்பு ஏற்பட்டுள்ளது.
புகார்களை மறுத்த ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம்
பங்குச்சந்தையிலும், முதலீட்டு சந்தையிலும் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், ஹெச்டிஎப்சி வங்கியின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "முழுமையற்ற சில தகவல்களின் அடிப்படையில் வங்கி மீது சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுகளையும், அனுமானங்களையும் நாங்கள் வன்மையாக மறுக்கிறோம். வங்கியின் அனைத்து உள் நிர்வாக ஆய்வுகளும், நடைமுறைகளும் நிறுவப்பட்ட விதிமுறைகளின்படியே மிகக் கடுமையான சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படுகின்றன. இறுதி முடிவு எட்டப்படும் வரை அனைத்து விதிகளும் முறையாகப் பின்பற்றப்படும்" என்று வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி போன்ற ஒரு முன்னணி வங்கியில் நிலவும் இந்த உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சர்ச்சை, நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் உள்ள சாமான்ய முதலீட்டாளர்கள் மத்தியிலும் தற்போது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
-
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
மே 29.. நாள் குறித்த LIC.. மக்களே ரெடியாக இருங்க.. உங்க கணக்கிற்கு வரும் சர்ப்ரைஸ்! -
கோல் இந்தியா பங்குகள் 6% திடீர் சரிவு.. ஆனா பிளாக் டீலில் Over-Subscription.. ஆடிப்போன மத்திய அரசு! -
இதுதான் ஹெச்டிஎப்சி வங்கியின் அறமா? 45 கோடி மார்க்கெட்டிங் சர்ச்சையின் பின்னணி? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு














Click it and Unblock the Notifications