எங்கள் கணிப்பு தவறாகவே இருக்கட்டும்... இந்தியா வேகமாக வளரட்டும்! - ஐஎம்எப்
வாஷிங்டன்: இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த எங்கள் கணிப்பு தவறாகவே இருக்கட்டும்.. இந்தியா இன்னும் வேகமாக வளரட்டும் என என்று சர்வதேச நிதி அமைப்பு ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் ஐஎம்எப் வெளியிட்ட முன்கணிப்பு அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு வெறும் 3.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என்று கூறியிருந்தது.

இதனை இந்திய அரசும், திட்டக் கமிஷனும் நிராகரித்ததுடன், 5 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி இருக்கும் என கூறின.
இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரமும் அமெரிக்க நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் 5.5 சதவீத வளர்ச்சி நிச்சம் என்றார்.
இந்த நிலையில் ஐஎம்எப்பின் ஆசியா பசிபிக் துறை இயக்குநர் அனூப் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் எந்த அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் 3.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என கணித்தது ஐஎம்எப் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அனூப் சிங், "ஐஎம்எப் கணிப்பிலும் இந்தியாவின் விளக்கத்திலும் பெரிய மாறுபாடில்லை. சில காலாண்டுகளில் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளைப் பொருத்து இந்த வளர்ச்சி அமையும்.
இந்த மாதிரி கணிப்புகளின் போது சில மாறுபாடுகள் இருப்பது சகஜம். குறித்த காலகட்டத்தில் பண ஓட்டம் கட்டுப்படுத்தப்படும்.. வெளி சக்திகளின் பாதிப்புகள் இருக்கலாம். இதையெல்லாம் இந்தியா எந்த அளவு வேகமாக எதிர்கொள்கிறது என்பதுதான் விஷயமே.
இன்னும் சில காலாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் தனது பழைய நிலைக்குத் திரும்பும் என ஐஎம்எப் நம்புகிறது. அப்போது 4.5 அல்லது 5 சதவீத வரை அதன் வளர்ச்சி இருக்கும். எங்கள் கணிப்பு தவறாகவே இருக்கட்டும். இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்தால் மகிழ்ச்சியே," என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications