நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% அதிகரிக்கும் - சக்தி காந்த தாஸ் நம்பிக்கை
2017 - 18 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதத்தை எட்டும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
சென்னை: அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதம் அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருப்பதால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதம் அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சக்திகந்த தாஸ், கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டானது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று நம்புகிறேன். இதன் காரணமாக அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% அதிகரிக்கும். அதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து பட்ஜெட் உரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.2 சதவீதத்தை அடைவது சாத்தியமில்லை என்கிற கருத்தை நிராகரித்த சக்தி காந்த தாஸ், வருமானம் உயர்வதால் 3.2 சதவீத நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவது சாத்தியம்தான் என்று கூறினார்.
பொதுமக்களிடத்தில் மிகையாக இருந்த தொகைகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் வரித்தாக்கல் கணக்கை விட இந்த ஆண்டு வரித்தாக்கல் கணக்கு அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் பார்க்கும் போது அரசின் வருமானம் அதிகரிக்கும்.
வருமான வரி தாக்கல் செய்யாதபட்சத்தில் கறுப்பு பணத்தை கணக்கில் கொண்டு வருவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள பிரதம மந்திரி கரீப் கல்யான் யோஜனா மூலம் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில தனிநபர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்வதில்லை.
வருமான வரித்துறை அவர்களிடமிருந்து வருமானத்தை பெருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த ஆண்டில் வருமானம் அதிகரிக்கும் என்றார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் வாய்ப்புள்ளது, இதனால் நேரடி வருமானம் 8.8 சதவீத வளர்ச்சி அடையும் என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications