எல்லாம் நம்மகிட்ட இருந்து பறிச்சதுதான்.. இந்தியன் ஆயில் நிறுவன நிகர லாபம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம், நடப்பு நிதியாண்டின், மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட இரட்டிப்பாக லாபம் பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்ற நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 39.95 பில்லியன் ரூபாய் என நிகர லாபம் பெற்றிருந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் லாபம் 97 சதவீதம் உயர்ந்து ரூ.78.83 பில்லியன் லாபம் சம்பாதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்த காலாண்டின் மொத்த வருவாய் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 1.16 டிரில்லியன் வருவாய் பெற்ற அந்த நிறுவனம், நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 1.32 டிரில்லியன் வருவாய் ஈட்டி சாதித்துள்ளது.
காலாண்டு அறிக்கை வெளியான பிறகு பங்குச் சந்தையில், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் பங்குகள் 4.40 சதவீதம் உயர்ந்தது.
பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில மாதங்களாக தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை வந்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களில் பழைய விலையுடன் ஒப்பிடும்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7க்கு மேலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.9ம் உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிகர லாபம் இரு மடங்காகியுள்ளது.
இந்த லாப உயர்வுக்கு வேறு காரணங்களை நிறுவனம் தெரிவித்தபோதிலும், சாமானிய மக்களுக்கு அடிப்படை புரியாமல் இல்லை.












Click it and Unblock the Notifications