வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அறிவிப்பு
டெல்லி: சில்லறை விற்பனை, பாதுகாப்பு உள்ளிட்ட 15 முக்கியத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிரடி சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் பொருளாதார முன்னேற்றத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், முதலீடுகளை அதிகரிக்கவும், நேரடி முதலீடு தொடர்பான பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கட்டுமானம், ஒளிபரப்பு, சிவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 15 துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. நாட்டில் முதலீடுகளை அதிகமாக ஈர்ப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்குதலை நோக்கமாக் கொண்டு, புதிய சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலீடுகளை அரசு பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை போக்கி புதிய சீர்திருத்தங்கள் மூலம் நேரடி முதலீடுகளை பெறுவதற்கு வழி உண்டாகும் வகையில் மத்திய அரசு இந்த சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இது தொழில் துறையினரிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுமானத் துறையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்களின் மூலம் இதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளிலில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்து மேக்-இன்-இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் உற்பத்தித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், பன்னாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board (FIPB) ) உச்சவரம்பு 3 ஆயிரம் கோடியிலிருந்து 5 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்தியில் அமைந்தது முதல் காப்பீட்டுத்துறையில் துறையில் அதிகபட்ச நேரடி முதலீடு, 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே திட்டங்களில் 100 சதவீத நேரடி முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், இந்தியாவில், வெளிநாட்டு நிறுவனங்கள், இரண்டு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. சீனா, 1.8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா, 1.75 லட்சம் ரூபாய் கோடி முதலீட்டுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications