வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அறிவிப்பு
டெல்லி: சில்லறை விற்பனை, பாதுகாப்பு உள்ளிட்ட 15 முக்கியத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிரடி சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் பொருளாதார முன்னேற்றத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், முதலீடுகளை அதிகரிக்கவும், நேரடி முதலீடு தொடர்பான பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கட்டுமானம், ஒளிபரப்பு, சிவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட 15 துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. நாட்டில் முதலீடுகளை அதிகமாக ஈர்ப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்குதலை நோக்கமாக் கொண்டு, புதிய சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலீடுகளை அரசு பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை போக்கி புதிய சீர்திருத்தங்கள் மூலம் நேரடி முதலீடுகளை பெறுவதற்கு வழி உண்டாகும் வகையில் மத்திய அரசு இந்த சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இது தொழில் துறையினரிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுமானத் துறையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்களின் மூலம் இதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளிலில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்து மேக்-இன்-இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் உற்பத்தித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், பன்னாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board (FIPB) ) உச்சவரம்பு 3 ஆயிரம் கோடியிலிருந்து 5 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்தியில் அமைந்தது முதல் காப்பீட்டுத்துறையில் துறையில் அதிகபட்ச நேரடி முதலீடு, 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே திட்டங்களில் 100 சதவீத நேரடி முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், இந்தியாவில், வெளிநாட்டு நிறுவனங்கள், இரண்டு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. சீனா, 1.8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா, 1.75 லட்சம் ரூபாய் கோடி முதலீட்டுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications