மிஸ்டர் அம்பானி நீங்க தான் உதவனும்.. அமெரிக்காவில் இருந்து வந்த போன் கால்! குஜராத்-க்கு ஜாக்பாட்!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உலகப்புகழ் பெற்ற மெட்டா (Meta) நிறுவனம் இணைந்து ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை அறிவித்துள்ளன.
சமூக வலைதள ஜாம்பவானான மெட்டா நிறுவனம், இந்தியாவில் தனது முதல் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தரவு மையத்தை (Data Centre) அமைக்க ரிலையன்ஸ் உடன் கைகோர்த்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பெரும் உயர்வை கண்டன.

குஜராத்துக்கு ஜாக்பாட்
இந்தியாவில் டேட்டா சென்டர் என்றால் தமிழ்நாடும், ஆந்திராவும் தான பிரதான தேர்வாக இருந்த காலம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வட இந்திய மாநிலங்களுக்கு பெரும் முதலீட்டாளர்களின் வருகையால் மாறி வருகிறது.
ரிலையன்ஸ் மற்றும் மெட்டா மத்தியிலான ஒப்பந்தத்தின்படி, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 168 மெகாவாட் திறன் கொண்ட ஒரு பிரம்மாண்டமான டேட்டா சென்டரை ரிலையன்ஸ் நிறுவனம் கட்டித் தரவுள்ளது. இந்த டேட்டா சென்டரை மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவுத் தேவைகள் மற்றும் கணினி செயல்பாடுகளுக்காக நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த டேட்டா சென்டரை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் இந்த டேட்டா சென்டரை இன்னும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
ரிலையன்ஸின் முழுமையான திட்டம்
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் நிறுவனம் வெறும் இடத்தை மட்டும் வழங்காமல், ஒரு முழுமையான சேவை வழங்குநராகச் செயல்பட உள்ளது. டேட்டா சென்டரின் வடிவமைப்பு, கட்டுமானம், மின்சாரம் மற்றும் தண்ணீர் மேலாண்மை, இணைய இணைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் என அனைத்தையும் ரிலையன்ஸ் நிறுவனமே கவனித்துக்கொள்ளும்.
குறிப்பாக, இந்த டேட்டா சென்டருக்கு தேவையான மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் வழங்கப்படும் என்பதும், குளிர்விப்புத் தேவைகளுக்காக கடல் நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் அதிரடி உயர்வு
இந்த மெகா கூட்டணி குறித்த செய்தி வெளியானதும், மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் 2.39 சதவீதம் உயர்ந்து 1,300 ரூபாய் என்ற அளவை எட்டியது. இருப்பினும், வர்த்தகத்தின் பிற்பகுதியில் லாப நோக்கம் கருதி பங்குகள் விற்கப்பட்டதால், இறுதியில் 0.25 சதவீத உயர்வுடன் 1,272 ரூபாய் என்ற அளவில் நிலைபெற்றது.
இந்தத் திட்டம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாயை அடுத்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்த்தும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அம்பானி - மார்க் ஜுக்கர்பெர்க் நட்பு
ரிலையன்ஸ் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு இடையிலான இந்த உறவு இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக இருந்த 2020 ஆம் ஆண்டில், மெட்டா நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்மில் சுமார் 5.7 பில்லியன் டாலர் முதலீடு செய்து 9.99 சதவீத பங்குகளை வாங்கியது.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சிறு வணிகங்களுக்காக செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்க இரு நிறுவனங்களும் ஏற்கனவே ஒரு கூட்டு திட்டத்தை தொடங்கியுள்ளன. தற்போது அமைய உள்ள டேட்டா சென்டர், இந்த இரு நிறுவனங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
ஏன் ஜாம்நகர் தேர்ந்தெடுக்கப்பட்டது?
இந்தத் திட்டத்திற்காக ஜாம்நகர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அங்கு தடையற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைப்பது ஒரு முக்கிய சாதகமாகும். மேலும், கடல் நீரை நன்னீராக்கும் வசதி மற்றும் ஜியோவின் அதிவேக ஃபைபர் நெட்வொர்க் வசதிகள் அங்கு மிகச் சிறப்பாக உள்ளன.
இது குறித்துப் பேசிய முகேஷ் அம்பானி, இந்தத் திட்டம் ஜாம்நகரை உலகின் மிக முக்கியமான 'ஹைப்பர்ஸ்கேல் AI கம்ப்யூட்டிங்' மையமாக மாற்றும் என்றும், இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை இது உலகத் தரத்திற்கு உயர்த்தும் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications