பங்குசந்தையில் தொடர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
மும்பை பங்குசந்தையில் காலையில் இருந்து தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.
மும்பை: மும்பை பங்குசந்தையில் காலையில் இருந்து தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேபோல் சர்வதேச அளவிலும் பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. இதனால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக மும்பை பங்கு சந்தையிலும் கடந்த வாரம் சரிவு ஏற்பட்டது.

முக்கியமாக கடந்த வெள்ளி கிழமை திடீர் என்று ஆயிரம் புள்ளிகள் சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதனால் அதிக அளவில் முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை ஏற்றத்துடன்தான் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 36,924.72 புள்ளிகளுடனும், நிஃப்டி 11,164.40 புள்ளிகளுடனும் தொடங்கியது. ஆனால் சில நிமிடத்தில் இதில் சரிவு ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் சரிவை சந்தித்தது,
தற்போது சென்செக்ஸ் 510 புள்ளிகள் சரிவை சந்தித்து 36141.45 புள்ளியில் உள்ளது. நிஃப்டி 170 புள்ளிகள் சரிவை சந்தித்து தற்போது 10994 புள்ளியில் உள்ளது. காலையிலேயே ஏற்பட்ட இந்த சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை சரிவு காரணமாக வங்கி சாராத நிறுவனங்களை உன்னிப்பாக கவனிக்க போவதாக கூறினார். ஆனாலும் தற்போது சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது,
முக்கியமாக, மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல், மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டாட்டா ஆகியவை அதிக இழப்பை சந்தித்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications