வணிகர்களுக்கு ஒரு நற்செய்தி... ஜிஎஸ்டி நெட்ஒர்க் புது அறிவிப்பு...
வணிகர்கள் இனி ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தில் உள்ள டேபிள் 9 மூலம் எடிட் இன்வாய்ஸ், கிரெடிட் நோட்ஸ், டெபிட் நோட்ஸ் மற்றும் ஷிப்பிங் பில் உள்ளிட்ட தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்
டெல்லி: ஜிஎஸ்டியின் கீழ் வரித் தாக்கல் செய்பவர்கள் இனி காலாண்டு முறையிலோ அல்லது மாதாந்திர முறையிலோ தாக்கல் செய்யலாம் என்று ஜிஎஸ்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
இந்த நிதியாண்டிலோ அல்லது கடந்த நிதியாண்டிலோ ஆண்டு மதிப்பீட்டில் ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக விற்றுமுதல் கொண்டு வரி செலுத்துபவர்கள் இனி மாதாந்திர அளவிலோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ வரித் தாக்கல் செய்யலாம் என்று ஜிஎஸ்டி நெட்வொர்க் கூறியுள்ளது.

இதுகுறித்து ஜிஎஸ்டி நெட்வொர்க் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியார்களிடம் பேசிய ஜிஎஸ்டி நெட்வொர்க் தலைவர் பிரகாஷ் குமார் பயனர்கள் ஜிஎஸ்டி போர்டலில் லாக்-இன் செய்து, GSTR-1 அல்லது GSTR-3B போன்ற ரிட்டன் படிவங்களைக் கோருவதற்கு முன் அவர்கள் பொருத்தமான வழி ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல ஜிஎஸ்டிஆர்-1ல் டேபிள் 9 என்ற வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எடிட் இன்வாய்ஸ், கிரெடிட் நோட்ஸ், டெபிட் நோட்ஸ் மற்றும் ஷிப்பிங் பில் உள்ளிட்ட தகவல்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications