கூட்டுச்சதி மோசடி குற்றச்சாட்டு: 78 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி 10 ஆண்டுகள் தடை
லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச அளவில் உலக வங்கி திட்டங்களை செயல்படுத்தி வந்த இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது.
டெல்லி: உலக வங்கி நிதியில் பல்வேறு நாடுகளில் பல மக்கள் நலமேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் வங்கதேசத்தில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வந்த ஆலிவ் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் ஜேய் மோடி ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிப்பதாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்கள் அளிக்கும் உதவித்தொகை சரியான வகையில் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர வேண்டும் என்பதாலும், லஞ்ச ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கிலும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஆலிவ் ஹெல்த் நிறுவனம் 10 ஆண்டுகள் 6 மாதங்களுக்கும், ஜேய் மோடி நிறுவனத்துக்கு 7 ஆண்டுகள் 6 மாதங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மொத்தம் 78 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஏஞ்செலிக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துக்கு 4 ஆண்டுகள் 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனமும் முறைகேடாகவும், ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்கியுள்ளது. இந்நிறுவனம் எத்தியோப்பியா மற்றும் நேபாளத்தில் உலக வங்கி திட்டத்தை செயல் படுத்தி வந்துள்ளது. இதே குற்றச் சாட்டின்கீழ் ஃபேமிலி கேர் என்ற இந்திய நிறுவனமும் நான்கு ஆண்டு களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் அர்ஜென்டீனா மற்றும் வங்கதேசத்தில் உலக வங்கி நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி வந்துள்ளது. மதுகான் பிராஜெக்ட்ஸ் லிமிடெட் , ஆர்கேடி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது 18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் இந்தியாவில் திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளன.
தத்வே குளோபல் என்விரோன்மென்ட் பிரைவேட் லிமிடெட், எஸ்எம்இசி (இந்தியா) பிரைவேட் லிமிடெட், மெக்லியோட்ஸ் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு ஓராண்டுக்கும் குறைவாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. 5 நிறுவனங்களுக்கு நிபந்தனை அடிப்படையில் தடைவிதிக் கப்பட்டுள்ளது.
மோசடி, ஊழல், கூட்டு சதி, திட்டப் பணிகளை பிற நிறுவனங்கள் மேற்கொள்ளவிடாமல் தடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மொத்தம் 220 கோடி மதிப்பிலான 390 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications