சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்சாபில் பரபரப்பு.. போலீசாரின் கைகளை வெட்டிய சீக்கியர்கள்.. துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாபின் டார்ன் தரனில் போலீசாரின் கைகளை வாள்களை வெட்டிய இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் நாந்தே என்ற நகரில் சீக்கியர்கள் இருவர் சேர்ந்த கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்கள், தலைமறைவாக இருக்கப் பஞ்சாபில் உள்ள டார்ன் தரன் மாவட்டத்தில் நுழைந்துள்ளனர். இது குறித்த ரகசிய தகவல் அப்பகுதி போலீசாருக்கு கிடைத்துள்ளது.

2 Nihangs attack police with swords in Punjab, both shot dead

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார், அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது போலீசாருக்கும் சீக்கியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசில் இருவரைச் சீக்கியர்கள் தங்கள் வாள்களைக் கொண்டு வெட்டியுள்ளனர். இதன் காரணமாக போலீசாரின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாப்பிற்காக போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்தவர்கள் கெம்கரன் பகுதியின் போலீஸ் அதிகாரி நரிந்தர் சிங் மற்றும் வால்டோஹா பகுதியின் போலீஸ் அதிகாரி பால்விந்தர் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

English summary
2 Nihangs shot dead as they attack police with swords.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X