அடிதூள்.. பஞ்சாப் தேர்தலையே திரும்பி பார்க்க வைத்த ஒற்றை தமிழர்! யாருங்க இந்த தூத்துக்குடிக்காரர்!
சண்டிகர்: தமிழகத்தைச் சேர்ந்த பகுஜன் திராவிடக் கட்சியின் (பிடிபி) தலைவரான ஜீவன் சிங் மல்லா என்பவர் வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தமிழர் என்பதால் அந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.
ஜீவன் சிங் மல்லா, இதற்கு முன்னர் பட்டியல் சாதி (SC) இந்து ஆவார். இவரின் இயற்பெயர் ஜீவன் குமார் மல்லா. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீக்கிய மதத்தைத் தழுவி பெயர் மாற்றம் செய்தார். இதோடு பகுஜன் திராவிடக் கட்சி என்ற கட்சியையும் தொடங்கினார்.

இந்தத் லோக்சபா தேர்தலில் அவரது கட்சியைச் சேர்ந்த ஏழு சீக்கியர்கள் தமிழ்நாட்டில் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் BDP வேட்பாளர்கள்.
தூத்துக்குடியை சேர்ந்தவர்: தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காடோடிபண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் சிங் மல்லா உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். 51 வயதான ஜீவன் சிங் மல்லா கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த கட்சியை தொடங்கினார்.
சீக்கிய மதம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களுக்கு சாதி அமைப்பில் இருந்து விடுதலை அளிக்கிறது. சீக்கிய மதம் மட்டுமே சுயமரியாதை மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் கிர்பான் அமைதியின் சின்னமாக இருப்பதால், அமைதியின் செய்தியை ஊக்குவிக்கிறது என்று கூறி இவர் இந்து மதத்தில் இருந்து சீக்கிய மதத்திற்கு மாறினார்.
சீக்கிய மதத்தைத் தழுவுவது என்னுடைய தனிப்பட்ட முடிவு. எனது மனைவி மற்றும் குழந்தைகள் அந்த மதத்திற்கு மாறவில்லை. கடந்த ஆண்டு ஜனவரியில் நான் சீக்கிய மதத்தைத் தழுவினேன். கேப்டிவேட்டிங் தி சிம்பிள்-ஹார்ட்டட்: எ ஸ்ட்ராக்கிள் ஃபார் ஹியூமன் டிக்னிட்டி இன் இந்திய துணைக் கண்டம் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைப் படித்த பிறகுதான் நான் மதம் மாறினேன்.
அந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தேன். எனது மனைவி புத்தகத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்துள்ளனர். குரு கோவிந்த் சிங் பற்றி பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் கன்ஷிராமிடம் இருந்து தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில் ஓஷோவின் சொற்பொழிவுகளில் இருந்து சீக்கிய குருக்கள் பற்றி தெரிந்து கொண்டேன். இது எல்லாம் நான் மதம் மாற காரணமாக இருந்தது.
எனது தாத்தா கலுங்கடியோயன் நிலமற்ற விவசாயக் கூலி. எனது தந்தை இளைய பெருமாள் அந்த பகுதியில் உள்ள 100 கிராமங்களில் முதல் பட்டதாரி. தமிழக அரசில் கிரேட் 1 அதிகாரியாக இருந்தார். எங்களுக்கு சுயமரியாதை, சம மரியாதை கொடுக்கும் மதமாக சீக்கிய மதம் இருக்கும் என்பதால்தான் இந்த மதத்திற்கு மாறினேன்.
கடந்த 10 வருடமாக அடிக்கடி பஞ்சாப்பிற்கு சென்ற ஜீவன் சிங் மல்லா இந்த முறை பஞ்சாப் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார்.
ஜீவன் சிங் மல்லா சட்டப் பட்டதாரி மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர், 2019 இல் BDP-ஐ தொடங்கினார். BDP எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இதுவாகும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உ.பி., மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 40 வேட்பாளர்களை அக்கட்சி இந்த முறை நிறுத்தியுள்ளது. அவரைத் தவிர மேலும் இரண்டு வேட்பாளர்கள் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று ஜீவன் சிங் மல்லா கூறினார்.
பஞ்சாப் லோக்சபா தேர்தலில் தமிழர் ஒருவர் தனியாக கட்சி தொடங்கி போட்டியிடுவது அங்கே அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications