அக்னிபாத்.. பஞ்சாப் முதல்வர் கான்வாயை மறித்த இளைஞர்கள்! தலையை வெளியே நீட்டி.. அடுத்து நடந்த சம்பவம்!
சண்டிகர்: அக்னிபாத் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரின் அழைப்புக்கு காரை நிறுத்திய பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் செயல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 'அக்னிபாத்' என்ற திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தில் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க வாய்ப்பளிக்கப்படும். 4 ஆண்டு பணியை முடித்து வெளியில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. இந்த திட்டம் மூலம் இந்தியாவின் முப்படைகளையும் இளமையாக இளைஞர்கள் நிறைந்ததாக வைத்து கொள்ளலாம் என ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நீண்டநாள் ராணுவ சேவையாற்ற விரும்பும் இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாக ராணுவ சேவை மாற்றப்படுவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ரயில்கள் எரிக்கப்பட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இளைஞர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த, பாஜக அரசு எடுத்த முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை. அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்களில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இருந்தும் இளைஞர்களின் போராட்டங்கள் குறைந்தபாடில்லை. இதனைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொடர்ந்து 2ம் நாளாக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மக்களை சந்திப்பதற்காக பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், காரின் சன்ரூஃப் வழியாக நின்றுகொண்டு வந்துள்ளார். அப்போது சாலையில் கருப்பு உடையணிந்து நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர், பகவந்த் மானுக்கு கைகளை காட்டி சிக்னல் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக காரை நிறுத்திய முதலமைச்சர் பகவந்த் மான், இளைஞரின் கைகளை பிடித்து என்ன கோரிக்கை என்று கேட்டார். அதற்கு, மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் குறித்து இளைஞர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அந்த இளைஞரிடம் பதிலளித்த பகவந்த் மான், அக்னிபாத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன் அனைத்து தலைவர்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். இதுதொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றால், நிச்சயம் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இளைஞர் ஒருவரின் குரலுக்கு முதலமைச்சர் பகவந்த் மான் காரை நிறுத்திய பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications