கொரோனா: பஞ்சாப்பில் நள்ளிரவு முதல் பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொதுபோக்குவரத்துக்கு தடை!
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பன்ஞ்சாப் மாநிலத்தில் நள்ளிரவு முதல் பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 170க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அம்மாநில அரசு இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான பொதுப் போக்குவரத்தையும் தடை செய்வதாக அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஆகியவை இயக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications