Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹரியானாவில் பாஜகவுக்கு பேரிடி.. 50-64 தொகுதிகளை அள்ளும் காங்கிரஸ்.. எக்சிட் போல் சர்வே

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. Dhuruv Research வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு படு தோல்வி கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

ஹரியானா மாநிலத்தில், நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அதன் பதவிக்காலம் முடிவடைவதால், இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஹரியானாவில் 90 சட்டம்னற தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக இங்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

exit polls 2024 haryana election exit polls haryana assembly elections 2024 2024

ஹரியானா தேர்தல் களத்தில் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், முதல்வர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர். ஹரியானாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. ஹரியானாவில் ஒரு கட்சி தனித்த்து ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

dhruv research என்ற சர்வே நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவின் படி ஹரியனாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்க்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்: -

பாஜக: 22-32
காங்கிரஸ்: 50-64
ஜேஜேபி+: 0
ஐஎன்.எல்.டி: 0

மொத்த தொகுதிகள் 90. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 46 ஆகும். dhurv research கருத்துக்கணிப்புகளின் படி காங்கிரஸ் கட்சிக்கு 64 தொகுதிகள் வரை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்தால் அந்த கட்சி எந்த சிக்கலும் இன்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஹரியானதேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டில் 47 இடங்களை வென்ற பாஜக எளிதாக ஆட்சிய பிடித்தது. ஆனால், கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில், 40 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்தது.பெரும்பான்மைக்கு தேவையான ஒரு சீட் இல்லாததால், 10 தொகுதிகளை வென்ற மாநிலக் கட்சியான ஜேஜேபி-ன் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைத்தது பாஜக.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்படவே, கடந்த மார்ச் மாதத்தில், ஜேஜேபி ஆதரவை திரும்ப பெற்றது. இதனால் சுயேச்சைகளில் ஆதரவுடன் பாஜக ஆட்சியை வைத்துள்ளது. எனவே ஹாட்ரிக் வெற்றியை பெற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை முன்வைத்து காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+