முலாயம் சிங் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்.. விரைவில் குணமடைய வேண்டி பிரியங்கா, ராகுல் காந்தி ட்விட்
சண்டிகர்: உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை மோசமானது. இதையடுத்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் குணமடைய வேண்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ட்விட் வெளியிட்டுள்ளனர்.

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரிய தலைவரான இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் 3 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். 1989 முதல் 91 வரை, பின்னர் 1993 முதல் 95 வரை, பிறகு 2003 முதல் 2007 வரை அவர் முதல்வராக இருந்துள்ளார்.
அகிலேஷ் யாதவின் தந்தையான முலாயம் சிங் யாதவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதனால் டாக்டர்கள் முலாயம் சிங் யாதவை ஐசியூ வார்டுக்கு மாற்றி அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது வெளியில் இருந்து கட்சி தொண்டர்கள் யாரும் ஆஸ்பத்திரி முன்பு கூட வேண்டாம் என்றும்.. அவரது உடல் நிலை சீரானதும் வந்து பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும் அவரது மகனும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், முலாயம் சிங் யாதவ் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், 'முலாயம் சிங் யாதவ் உடல் நிலை மோசம் அடைந்த தகவல் கேட்டு நாங்கள் மிகுந்த கவலை அடைந்தோம். அவர் விரைவில் உடல் நலம் தேற இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் ராகுல் காந்தியும் முலாயம் சிங் யாதவ் விரைவில் பூரண குணம் அடைய விரும்புவதாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications