எங்கள் மீது தவறில்லை.. மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் வராததால் பழிபோடுகிறார்கள்: பஞ்சாப் முதல்வர் சுளீர்
சண்டிகர்: பஞ்சாபில் பிரதமர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தங்கள் மீது தவறு இல்லை என்றும் திட்டமிட்டபடி கூட்டத்துக்கு மக்கள் வராததால் பாஜகவினரே திட்டமிட்டு பேரணியை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.
ஆனால் அப்பகுதியில் விவசாயம் காரணமாக சாலை மறிக்கப்பட்டு இருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்பாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது.
இதையடுத்து பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இது ஒரு விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும் எனவும் மாற்று பயணத்திற்காக பிரதமர் சாலை வழியாக செல்லும் நேரும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் எனக் கூறினர்.

பாஜக குற்றச்சாட்டு
இது குறித்து பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பஞ்சாப் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க இருந்த பிரதமரின் வருகை சீர்குலைந்தது வருத்தமளிக்கிறது எனவும், பேரணியில் மக்கள் கலந்து கொள்வதை தடுக்குமாறு மாநில காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் இதுகுறித்து முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள மறுத்து விட்டார் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

பஞ்சாப் முதல்வர் விளக்கம்
இந்நிலையில் முதல்வரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விளக்கம் அளித்துள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தங்கள் மீது தவறு இல்லை எனவும் இது பாஜகவின் திட்டமிடப்பட்ட செயல் என கூறியுள்ளார். இதுகுறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரபல செய்தி சேனல் ஒன்றிடம் பேசிய முதல்வர் சன்னி , பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை எனவும், பிரதமர் மோடி விமானம் மூலம் வர திட்டமிட்டிருந்தார், ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார் என கூறியுள்ளார்.
Recommended Video

பொய்யான சாக்குபோக்கு
பிற்பகல் 3 மணிக்குள் சாலைகளில் இருந்து செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களிடம் தான் கோரிக்கை விடுத்திருந்ததாக கூறிய பஞ்சாப் முதல்வர் சன்னி, பிரதமரிப் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்காக நாற்காலிகளை பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தார்கள் எனவும் ஆனால் 700 பேர்தான் நிகழ்சிக்கு வந்திருக்கிறார்கள் என்றார். இதன் காரணமாகவே அவர்கள் மழை என்ற சாக்குப்போக்கு மற்றும் மற்ற காரணங்களை கூறி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர் எனக் கூறினார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications