காலிஸ்தான் பயங்கரவாதி 'கனடா' கோல்டி பிரார் கோஷ்டிக்கு எதிராக பஞ்சாபில் 1,000 இடங்களில் மெகா வேட்டை!
சண்டிகர்: பஞ்சாப்பில் காலிஸ்தான் தயங்கரவாதியும் நிழல் உலக தாதாவுமான கோல்டி பிரார் கோஷ்டிக்கு எதிராக மாநிலம் முழுவதும் 1,000 இடங்களில் அம்மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்து வருகிறது. காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜாருக்கு குடியுரிமை தந்தது கனடா. தீவிரவாதி நிஜ்ஜார் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்ர். இதற்கு இந்தியாவே காரணம் என கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா- கனடா இடையேயான உறவில் மோதல் உருவாகி உள்ளது.

முறியும் இந்தியா- கனடா உறவு: கனடாவில் இருந்து இந்தியாவின் தூதரக அதிகாரியை அந்நாட்டு முதலில் வெளியேற்றியது. இதற்கு மத்திய அரசும் பதிலடி கொடுத்தது. இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரி நாட்டில் வெளியேற உத்தரவிடப்பட்டது. தற்போது கனடா நாட்டவருக்கான விசா வழங்குவது காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், கனடா வாழ் இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சீக்கிய பயங்கரவாதிகள் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
பஞ்சாப் போலீஸ் அதிரடி: இந்த பதற்றமான சூழ்நிலையில் கனடாவுக்கு சென்று காலிஸ்தான் தீவிரவாதி ப்ளஸ் நிழல் உலக தாதாவாக உருவான கோல்டி பிரார் கோஷ்டிக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மாநில போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,000 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
#WATCH | Punjab | Police action across the state today to nab the close aides of Goldy Brar. Police raids are going on in Moga, Ferozepur, Tarn Taran and Amritsar rural.
— ANI (@ANI) September 21, 2023
Visuals from Moga. pic.twitter.com/y6rHop9IMh
யார் இந்த கோல்டி பிரார்?: பஞ்சாப் மாநிலம் ஶ்ரீமுக்த்ஸார் சாகிப் என்ற இடத்தை பூர்வீகாமக் கொண்டவர். 2017-ம் ஆண்டு கனடாவுக்கு மாணவர் விசாவில் படிக்க சென்றார். கனடாவில் செயல்பட்டு வந்த சமூக விரோத கும்பலான லாரன்ஸ் பிஷோனி கும்பலில் இணைந்தார். இதன் பின்னர் அப்படியே காலிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களிலும் இணைந்து செயல்பட்டார் கோல்டி பிரார். பஞ்சாப் பாடகார் சித்து மூஸ்வாலா படுகொலையில் கோல்டி பிராருக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
VIDEO | Police Police raids multiple locations in Ferozepur as part of its crackdown on gangster Goldy Brar. pic.twitter.com/EcRIfWOg2R
— Press Trust of India (@PTI_News) September 21, 2023
1,000 இடங்களில் சோதனை: பஞ்சாப் மாநிலத்தின் மோகா, ஃபெரோஸ்பூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அம்மாநிலம் முழுவதும் நடத்தப்படும் திடீர் சோதனையால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரி தார்செம் மாஷிக் கூறுகையில், மாநிலத்தில் உள்ள நிழல் உலக தாதாக்களை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சோதனைகள் நடைபெறுகின்றன என்றார்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications