தமிழகத்தில் மேலும் 1,027 பேருக்கு கொரோனா... சென்னையிலும் பாதிப்பு குறைகிறது!
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,027 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 292 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,129 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1,027 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43 -வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 65 ஆயிரத்து 510 மாதிரிகளுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 37 லட்சத்து 95 ஆயிரத்து 803 ஆக உள்ளது.
இன்று புதிதாக 65 ஆயிரத்து 142 தனிநபர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்து 94 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,129 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று 292 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 799 ஆக உயர்ந்துள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications