Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக வரலாற்றில் முதல்முறை! ஒரே அடியாக 1.5 லட்சம் பேர்.. உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதம்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர். அவர்கள் எதற்கு இந்த கடிதத்தை எழுதினார்கள் என்பதுதான் இதில் வியக்க வைக்கும் செய்தி!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நாய் கடி சம்பவங்கள் அதீதமாக உயர்ந்து, சுகாதாரத் துறை மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. 2025 ஆம் ஆண்டில், மாநிலம் முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்களால் கடிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரவுகள் காட்டுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெறிநாய்க்கடி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

dog

சமீபத்திய சம்பவங்களில், வீடற்ற நாய்களும், வளர்ப்பு நாய்களும் சம்பந்தப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் ஒரே நாளில் பலரை நாய்கள் கடித்த நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசிகளை உரிய நேரத்தில் போட பல உரிமையாளர்கள் தவறிவிடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நாய் ஆரோக்கியமாகத் தோன்றினாலும், கடித்தவுடன் காயத்தைச் சுத்தம் செய்து, வெறிநாய்க்கடி தடுப்பூசியின் முழுப் போக்கையும் தாமதமின்றி எடுத்துக்கொள்வது கட்டாயம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

நாய் கடி நிகழ்வுகள் அதிகரித்தபோதும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெறிநாய் கடியால் ஏற்படும் மரணங்கள் சற்று குறைந்துள்ளன. மேம்பட்ட விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசிகளின் எளிதான அணுகலே இதற்குக் காரணம் என சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தெரு நாய்களுக்கான கருத்தடை மற்றும் தடுப்பூசி முகாம்கள் போதுமான வேகத்தில் நடைபெறவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒன்றரை லட்சம் பேர் கடிதம்

இப்படிப்பட்ட நிலையில்தான் தெருநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழகம் முழுவதும் இருந்து விலங்கு நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தெருநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று இதில் கோரி உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவில், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் உள்ள தெருநாய்களை அப்புறப்படுத்தி, குறிப்பிட்ட முகாம்களில் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தியுள்ளது. ஆனால், அவற்றை மீண்டும் அதே இடங்களில் விடுவிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமலாகும் இந்த உத்தரவைச் செயல்படுத்தப் புதிய முகாம்கள், தடுப்பு வேலிகள், மற்றும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

இந்த நிலையில் நாய்களை இடமாற்றம் செய்வது குறித்த கவலைகளை முன்னிறுத்தி, நாடு தழுவிய ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்குப் பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டன.

இந்தப் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நாய்களை, மனிதாபிமானமற்ற முறையில் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல மாவட்டங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் நாய் ஆர்வலர்கள் கூடி, ஒரே மாதிரியான மனுக்களை அனுப்பினர். இந்த உத்தரவு ABC விதிகள் 2023 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட விலங்கு நலச் சட்டங்களை மீறும்வகையில் உள்ளது என ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாய் ஆர்வலர்கள் சொல்வது என்ன?

இது தொடர்பாக நாய் ஆர்வலர்கள் கூறுகையில், தெருவோர நாய்களை சட்டவிரோதமாக இடமாற்றம் செய்தல், குப்பைகளில் வீசுதல் மற்றும் தவறாக நடத்துதல் பற்றிய கவலைக்கிடமான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். இதற்காகவே கடிதம் எழுதி உள்ளோம். இத்தகைய பல நடவடிக்கைகள், விலங்குகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சட்டரீதியான வழிகாட்டுதல்களுக்கு நேரடியாக எதிரானவை. இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக்கூடிய நாங்கள் கடிதங்களை அனுப்பி உள்ளோம்.

நாய் ஆர்வலர்கள் , மாணவர்கள், மூத்த குடிமக்கள், தொழில் வல்லுநர்கள், நாய்களுக்கு உணவளிப்போர், குடும்பத்தினர் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற வாசிகள் எனப் பலரும் தமிழகம் முழுவதும் இப்படி கடிதம் அனுப்பி உள்ளனர் தங்கள் தெருக்களில் நாய்கள் காணாமல் போனதை கணக்கிட்டு இந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+