சி. மகேந்திரன் சிவப்பு துண்டுடன் போய்.. தவெக கிட்ட நிபந்தனை.. விஜய் அவசரப்பட்டு தப்பு செஞ்சுட்டாரோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சி. மகேந்திரன் இப்படியொரு முடிவு எடுப்பார் என்று நினைக்கவில்லை.. அதேபோல அதிமுகவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம், எடப்பாடி பழனிசாமி மற்றவர்களை விட்டுக்கொடுத்து அரவணைத்துச் செல்லாததுதான். இதே போன்ற பிடிவாத குணத்துடனும், தன் குடும்பத்தை மட்டுமே முன்னிறுத்தும் ஒரு சூழ்நிலையிலும் தொடர்ந்து கட்சியை நடத்தினால் 30% வாக்கு வங்கியைப் பெற்றிருந்த ஒரு மாபெரும் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும். அதிமுக இன்னொரு மதிமுகவாக மாறிவிடும் என்று கருத்து கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செந்தில்.

ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செந்தில், "அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் கொத்துக்கொத்தாகத் தமிழக வெற்றி கழகத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் அங்கு போயிருக்கிறார். கொள்கைவாதிகள் இப்படி மாறுவது வியப்பாக இருக்கிறது.

C Mahendran news TVK updates Vijay politics Tamil Nadu political news TVK party news political developments

சி. மகேந்திரன் - சிவப்பு துண்டு

சி. மகேந்திரன் நல்லகண்ணு, தா. பாண்டியனுடன் பயணம் செய்தவர். மாநிலச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்காத வருத்தத்தில் ஒதுங்கியிருந்தவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒருவித வருத்தத்தில் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தனக்கு அந்த மாநிலச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவரிடம் இருந்தது. முத்தரசனுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டதால், தனக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற சங்கடத்தில் அவர் கொஞ்சம் ஒதுங்கித்தான் இருந்தார்.

இப்போது தவெகவில் இணைந்துள்ளார். அங்கு புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களிடம், சிகப்பு துண்டோடு நான் அரசியல் பயணம் செய்வதற்கு எனக்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையைக் கேட்கிறார்.

நீங்கள் கூட்டணியில் இருக்கும் பட்சத்தில், மகேந்திரன் போன்ற முக்கிய நிர்வாகியை தவெக எப்படித் தன் கட்சிக்குக் கொண்டு வந்தது என்று தெரியவில்லை. இது ஒரு மிகப்பெரிய தவறு. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருக்கும்போதே இந்த நிலை என்றால், அவர்கள் வெளியே போகும்போது தவெக என்ன பண்ணுவார்கள்?


தவெக அவசரப்பட்டு செய்த தவறு

எந்த விலை கொடுத்தாவது நிர்வாகிகளைப் பர்சேஸ் பண்ணி ஒன்னுமில்லாமல் ஆக்கிவிடுவார்கள். இது கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திருமாவளவன், ஐயூஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. தவெகவிடம் நீங்கள் அரசியல் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது, அவர்களுக்கு இன்னும் இந்த வழி தெரியாது, போகப் போகத்தான் கற்றுக் கொள்வார்கள்.

மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்யப் போவதாகத் தகவல் வருகிறது. ரிசைன் பண்ணிடுங்க, எவ்வளவு செலவு பண்ணீங்களோ காசு வாங்கிக்கங்க, ஆனால் இடைத்தேர்தலில் நீங்கள்தான் கேண்டிடேட் என்று கேரண்டி தர முடியாது என்பதுதான் தவெக-வின் பாலிசி. முதல்முறையாக எம்.எல்.ஏ-வாக வந்தவர்கள் வெறும் காசை வாங்கிக்கொண்டு எப்படி திடீரென்று ரிசைன் பண்ணுவார்கள்?

வைகோவின் 2 எம்எல்ஏக்கள்

ஒருவேளை தவெக அந்த வேலையைப் பார்த்தால், திமுக அதைவிடப் பெரிய கட்சி, அவர்களுக்கு இதைவிட நன்றாகச் செய்யத் தெரியும் என்று கூறி எம்.எல்.ஏ-க்களைத் தன்பக்கமே இழுத்துவிடும். வைகோ தங்களின் இரண்டு எம்.எல்.ஏ-க்களிடமும் பேசியுள்ளார், ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

திமுக தரப்பில் வைகோவிற்கு அடுத்து மீண்டும் ராஜ்யசபா சீட் தருவதாகப் பேசியிருக்கிறார்கள். அப்பாவிற்கும் பையனுக்கும் மட்டுமே சீட் கொடுத்தால், டெல்லிக்கு இருவருமே சென்றுவிட்ட பிறகு தமிழ்நாட்டில் மாநிலத்தை யார் பார்ப்பார்கள்? இது மதிமுகவிற்குள் ஒரு சிக்கலாக மாறும்.

எடப்பாடி பழனிசாமி பிடிவாதம்

சட்டசபைக்குள் நுழையும் போது எடப்பாடி ஒரு குரூப்பாகவும், வேலுமணி தரப்பு ஒரு குரூப்பாகவும் தனித்தனியாகச் செயல்பட்டதை நாம் கவனித்தோம். செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது வேலுமணி பதிலே சொல்லாமல் கடந்துபோனார்.

எடப்பாடி பழனிசாமியுடைய சில முடிவுகளால் தான் 25 பேரும் வேலுமணியும் அதிருப்தியில் இருக்கிறார்கள். "நீங்களே சி.எம் ஆக இருங்கள், திமுக வெளியில் இருந்து ஆதரவு தரும்" என்ற சூழ்நிலை வந்தபோது வேலுமணி தரப்பு ஒத்துக்கொண்டது. "அடுத்தகட்டமாக நீங்கள் சி.எம், நீங்கள் டெபுடி சிஎம்" என்று சொன்னதையும் அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் இபிஎஸ் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

நொந்து போன விஜயபாஸ்கர்

சி. விஜயபாஸ்கர் கடந்த தேர்தலின் போது கட்சிக்கு மிகப்பெரிய தொகையை நிதியாகக் கொடுத்ததோடு, தன் சொந்தப் பணத்தையும் பெருமளவில் செலவு செய்தார். ஆனால், இன்று இபிஎஸ்ஸால் அவர் ஓரங்கட்டப்பட்டு மனவருத்தத்தில் இருக்கிறார். இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு இன்று அவர் ஒதுங்கிப் போவது அவருக்கு எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்று நீங்களே சாதாரணமா சொல்லுங்கள்.

இப்போது அதே நிலைமைதான் எஸ்.பி. வேலுமணிக்கும் ஏற்பட்டுள்ளது. அவரால் தற்போது என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் தவித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தைப் பொறுத்தவரை அவர் கண்டிப்பாக வேறு எந்தக் கட்சிக்கும் போகமாட்டார். அவர் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்யப் போவதாக ஒரு முடிவில் இருக்கிறாரே தவிர, மற்றவர்களைப் போல வேறு எங்கும் மாற மாட்டார்.

ஏனென்றால், 'நம்முடைய சீனியாரிட்டிக்கு நாம் வேறு எங்கும் போக முடியாது' என்ற ஒரு மனநிலை அவரிடம் இருக்கிறது. அதனால்தான் அவர் வேண்டாம் என்று ஒதுங்கும் முடிவில் இருக்கிறார்.

அதிமுக இனனொரு மதிமுக

இவை எல்லாவற்றிற்கும் மிக முக்கியக் காரணம் எடப்பாடி பழனிசாமி மற்றவர்களை விட்டுக்கொடுத்து அரவணைத்துச் செல்லாததுதான். அவர் இதே போன்ற பிடிவாத குணத்துடனும், தன் குடும்பத்தை மட்டுமே முன்னிறுத்தும் ஒரு சூழ்நிலையிலும் தொடர்ந்து கட்சியை நடத்தினால் என்ன ஆகும்? 30% வாக்கு வங்கியைப் பெற்றிருந்த ஒரு மாபெரும் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும்.

இதே நிலைமை நீடித்தால், அதிமுகவின் நிலைமை எதிர்காலத்தில் வைகோவின் மதிமுக போல ஒரு மிகச்சிறிய கட்சியாக மாறுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆளுங்கட்சிக்கு எதிராகப் பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு இதுதான் தற்போதைய நிலைமை" என்று பத்திரிகையாளர் செந்தில் மிக விரிவாகத் தன் நேரடி உரையாடலில் விளக்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+