நாடு முழுக்க உள்ள சம்பளதாரர்களுக்கு ஷாக்.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. உடனே சுதாரிக்கவும்!
சென்னை: நாடு முழுக்க தனியார், அரசு ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ரிட்டர்ன்களை இந்த முறை வருமான வரித்துறையினர் தீவிர கண்காணிப்பு செய்ய உள்ளனர். இதன் மூலம் 1.6 லட்சம் வருமான வரிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளன
வருமான வரித்துறையானது 2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான (Assessment Year) சுமார் 1.65 லட்சம் ரிட்டர்ன்களை தீவிரமாக ஆய்வு செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான நோடீஸ்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜூன் 30 ஆகும். 2024-25 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை (ITR) ஆய்வு செய்வதற்கான அறிவிப்புகள் ஜூன் 30-க்குள் அனுப்பப்பட வேண்டும்.

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாகும். இது ஒரு மிகப்பெரிய அதிகரிப்பாகக் கருதப்படுகிறது.
வருமான வரித்துறை வட்டாரங்களின் தகவல்படி, வருமான வரிச் சட்டம், 1961 பிரிவு 143(2)-ன் கீழ் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான நோட்டீஸ்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. இந்த நோட்டீஸ்கள், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை விரிவாக மதிப்பீடு செய்து சரிபார்க்கும் நடைமுறையைத் தொடங்குகின்றன.
ஆய்வுக்கு உட்படுத்த காரணமான முக்கிய அம்சங்கள்
இந்த ஆண்டு நோட்டீஸ்களை அனுப்புவதற்கான முக்கிய காரணங்களாக அசாதாரணமான பண டெபாசிட்கள், விளக்கமளிக்கப்படாத அதிகப்படியான வங்கி வரவுகள், பொய்யான ஆதாரங்கள் மூலம் செய்யப்பட்ட முதலீடுகள், ஜிஎஸ்டி (GST) தரவுகளுடன் ஒப்பிடும்போது ஏற்படும் விற்பனை முரண்பாடுகள், மற்றும் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் (M&A) தொடர்பான முரண்பாடுகள் ஆகியவை உள்ளன.
CASS (Computer Assisted Scrutiny Selection) என்பது வருமான வரித்துறையால் பயன்படுத்தப்படும் ஒரு தரவு சார்ந்த, ஆபத்து அடிப்படையிலான அமைப்பு ஆகும். இது வருமான வரிக் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக செயல்படுகிறது. முன்னரே வரையறுக்கப்பட்ட ஆபத்து காரணிகள் மற்றும் தெரிவிக்கப்பட்டுள்ள வருமானம், செலவு அல்லது பரிவர்த்தனைகளில் உள்ள முரண்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அமைப்பு வழக்குகளைத் தேர்ந்தெடுக்கிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் கண்காணிக்கப்படும் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 2.5 முதல் 3 லட்சமாக உயர்ந்துள்ளது. 2022, 2023 மற்றும் 2024 நிதியாண்டுகளில், ஆண்டுதோறும் சராசரியாக 50,000 முதல் 60,000 வரையிலான வழக்குகளே ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், 2025 மதிப்பீட்டு ஆண்டில், மேம்படுத்தப்பட்ட தரவு பகுப்பாய்வு, கடுமையான விதிமுறைகள் மற்றும் நிதி தரவுத்தளங்களின் ஒருங்கிணைப்பு காரணமாக இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
கிரிப்டோ வருமானத்தை மறைத்தால் ஏற்படும் விளைவுகள்
வருமான வரி செலுத்தும் போது கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை மறைத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் வெளிப்படையானவை என்பதால், வருமானத்தை மறைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு நாடு முழுக்க தனியார், அரசு ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ரிட்டர்ன்களை இந்த முறை வருமான வரித்துறையின் தீவிர கண்காணிப்பு செய்ய உள்ளனர். வருமான வரித்துறையானது பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிந்து, வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்காணித்து வருகிறது. இதன் மூலம், சரியான முறையில் வருமான வரி செலுத்துவதை உறுதி செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications