மீனவர்களுக்கு குட்நியூஸ்.. இன்று முதல் 1.79 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்!
சென்னை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்துக்காக ரூ.89.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிவாரண தொகை இன்று முதல் 14 கடலோர மாவட்டத்தில் உள்ள 1.79 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் என்பது 61 நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வது இல்லை.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாள் நடைமுறையில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசு சார்பில் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளதோடு, இன்று முதல் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத்துக்காக மொத்தம் தமிழ்நாடு அரசு ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதி மூலம் தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 1.79 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. ஒரு மீனவ குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் இந்த ரூ.89.50 கோடி நிவாரண தொகை பிரித்து ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளிலும் இன்று முதல் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications